Followers

Sunday, August 16, 2015

நண்பர்களுக்கு


ணக்கம்!
          நமது பதிவுக்கு வரும் நண்பர்கள் புதிய பிளாக்கைப்பற்றி சொல்லியுள்ளனர். ஒவ்வொருவரும் தங்களின் கருத்தை சொல்லியுள்ளனர்.

தினமும் ஜாதககதம்பத்தில் பதிவுகள் வரும் எப்பொழுதும் உள்ள கருத்துக்களை உங்களிடம் சொல்லிக்கொண்டு இருப்பேன். புதிய பிளாக்கில் என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தை சொல்லபோகிறேன். அப்படி சொல்லும்பொழுது அதன் வழியாக அவர்கள் பயிற்சியை செய்யமுடியும். அதற்கு விரும்பும் நண்பர்கள் பணத்தை செலுத்தி அதில் பங்குக்கொள்ளலாம்.

ஆன்மீகப்பயிற்சி செய்யவேண்டும் ஆனால் பணம் இல்லை என்று சொல்லுபவர்கள் என்னை நேரில் வந்து சந்தித்து அதற்கான வழிகளை கேட்டால் நான் இலவசமாக சொல்லிக்கொடுப்பேன். கண்டிப்பாக நேரில் வரவேண்டும். இது மட்டும் தான் என்னால் செய்யமுடியும்.

என்னால் வரமுடியவில்லை எனக்கு வேலை பளு அதிகம் இருக்கின்றது எனக்கு போனில் சொல்லுங்கள் என்று சொன்னால் அது என்னால் முடியாது. . ஏன் என்றால் தினமும் பிஸியாக வேலைகளை செய்பவர்கள் கூட மாதத்திற்க்கு ஒரு முறை என்னை வந்து சந்தித்துவிட்டு செல்லுகிறார்கள். 

புதிய பிளாக்கில் சேர்ந்த நண்பர்களுக்கு மெயில் வழியாக தகவல்களை அனுப்பிக்கொண்டு இருக்கின்றேன். தினமும் மெயிலை பாருங்கள். புதிய தளம் உருவான உடன் அதில் படித்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: