Followers

Wednesday, August 5, 2015

நல்லவைக்காக இணையுங்கள்


வணக்கம்!
          நமது புதிய பிளாக்கிற்க்கு நண்பர்கள் சேர்ந்துக்கொண்டு வருகின்றனர். நான் எதிர்பார்த்தது என்னிடம் அடிக்கடி ஆன்மீக சம்பந்தமாக வருபவர்களாக இருப்பார்கள் என்று தான் நினைத்தேன் ஆனால் எனக்கு அறிமுகம் இல்லாதவர்கள் கூட இதில் இணைகின்றனர். 

நமது பதிவுக்கு வரும் அனைவரும் இதற்கு வரவேண்டும் என்று எனது எண்ணம் உள்ளது. தொடர்ச்சியாக அது கண்டிப்பாக நடைபெறும்.இந்த புதிய பிளாக்கில் உள்ளவை அனைத்தும் உங்களின் ஆன்மீகவாழ்வுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். 

இவர் எதற்கு எடுத்தாலும் அம்மன் அம்மன் என்பரே ஒரு வேலை அம்மனை வைத்து வேலை செய்வது எல்லாம் கற்றுக்கொடுப்பார் என்று நினைக்கவேண்டாம். இது தனி மனிதனுக்கு மட்டும் உள்ளது. இது உங்களின் பிறவி பாதையை கடக்க உதவும் கருவியாக மட்டுமே இருக்கும்.

அடுத்தவர்களை காப்பாற்ற போகிறேன் அதற்க்கு நான் ஆன்மீகத்தை கற்றுக்கொள்கிறேன் என்று எல்லாம் இதில் இணையவேண்டாம். உங்களின் தனிப்பட்ட பிரச்சினை மற்றும் ஞானத்தை அடையும் வழி மட்டுமே இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: