Followers

Friday, August 21, 2015

சூட்சம உடல்


வணக்கம்!
          முன்னேற்ற பாதையில் செல்லவேண்டும் என்று நினைப்பவர்கள் ஆன்மீகத்தில் கோவில் கோவிலாக சென்று வழிபட்டு வருகின்றனர். வழிபாடு ஒருவரை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றாலும் தன்னை காத்துகொள்ளும் வழிகளை ஒருவர் செய்யவேண்டும்.

கோவிலுக்கு சென்று வழிபடுவது ஒரு வழியாக இருந்தாலும் சூட்சம சரீரத்தை ஒருவர் காக்கும்பொழுது மட்டுமே தன்னை எல்லா வழிகளிலும் மேம்படுத்திக்கொள்ளமுடியும். சூட்சம சரீரத்தை சரியான முறையில் பாதுகாத்துவிட்டால் உடலுக்கு வரும் தீங்கு எல்லாம் சரியாகி உங்களின் வாழ்வு முன்னேற்றப்பாதையில் செல்லும்.

பல பதிவுகளில் நான் சூட்சம சரீரத்தை காக்கும் வழிகளை சொல்லியுள்ளேன். திருஷ்டி கழிப்பது கூட சூட்சம சரீரத்தை பாதுகாக்கும் ஒரு வழி தான். குடும்பத்தில் உள்ள அனைவரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருஷ்டி கழிக்க சொல்லிருப்பேன். அதனை எல்லாம் செய்யுங்கள்.

ஒருவர் தொழில் செய்கிறார் என்றால் கண்டிப்பாக அவர் சூட்சம சரீரத்தை பாதுக்காக்கும் வழிகளை மேற்க்கொள்ளவேண்டும். அப்படி மேற்க்கொண்டால் மட்டுமே அவரால் வெற்றி காணமுடியும். கோவிலுக்கு சென்று வருவது சூட்சம சரீரத்தை பாதுகாக்கும் வழிகள் கிடையாது. 

தொழில் செய்பவர்களுக்கு சூட்சம சரீரத்தை பாதுகாக்க பல வழிகள் இருக்கின்றன. அதனை எல்லாம் உங்களுக்கு அருகில் இருக்கும் ஆன்மீகவாதிகளிடம் சென்று செய்துக்கொள்ளுங்கள்.

விரைவில் சென்னை வருவதாக திட்டம் இருக்கின்றது. இந்த வாரம் அல்லது அடுத்த வாரமாக இருக்கும். சென்னையில் சந்திக்க நினைக்கும் நண்பர்கள் உடனே என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.சென்னை வரும்பொழுது சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: