Followers

Sunday, August 30, 2015

சந்திப்பு


வணக்கம்!
         நமது ஜாதககதம்பத்தில் பல நண்பர்கள் வந்து படித்து செல்லுகின்றனர். இதில் ஒரு சில நண்பர்கள் என்னை தொடர்புக்கொள்வது கூட கிடையாது அப்படியே சென்றுவிடுகின்றனர். அப்படி செல்லும் நண்பர்கள் திடீர் என்று பிரச்சினை வரும்பொழுது என்னை கூப்பிட்டு இப்படி ஒரு பிரச்சினையில் சிக்கியுள்ளேன் எப்படியாவது இதில் இருந்து காப்பாற்றுங்கள் என்று சொல்லுகின்றனர்.

மருத்துவமனையில் இருக்கின்றார் அவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கின்றார் அவருக்காக அம்மனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லுகின்றனர். அம்மனிடம் வேண்டிக்கொள்வது பிரச்சினையில்லை ஆனால் அவரை நாம் காப்பாற்றவேண்டும் என்றால் அவரைப்பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கவேண்டும். நீங்கள் காப்பாற்றுங்கள் என்று சொல்லுகின்றீர்கள் உங்களை கூட எனக்கு தெரியவில்லை என்றால் எப்படி இதனை செய்வது.

ஜாதககதம்பத்திற்க்கு வரும் ஒவ்வொரு நட்புகளும் என்னை ஒரு முறை சந்தித்துவிடுங்கள். பல ஊர்களுக்கு நான் வருகிறேன் அப்படி வரும்பொழுது என்னை சந்தித்துக்கொள்ளுங்கள். நமது பதிவில் ஆரம்ப கட்ட நாட்களில் இருந்து இன்றுவரை பல நண்பர்கள் என்னை சந்திக்கொண்டு இருக்கின்றனர்.

வெளிநாடுகளில் நான் வசிக்கிறேன் என்றால் ஊருக்கு வரும்பொழுது என்னை வந்து சந்தியுங்கள். அப்படி இல்லை என்றால் போனில் தொடர்புக்கொண்டு பேசுங்கள். 

அவசர காலத்தில் அழைக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இது பொருந்தும் என்பது மட்டும் இல்லை. இத்தனை நாட்கள் படித்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்னும்பொழுது ஒரு சந்திப்பு அவசியம் என்பதால் உங்களிடம் இதனை சொல்லுகிறேன். அந்தந்த ஊர்களுக்கு வரும்பொழுது கூட சந்திக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: