Followers

Thursday, August 27, 2015

நாளைய நாளில்


வணக்கம்!
          நாளை ஒரு முக்கியநாளாக வருகிறது. நடராஜருக்கு அபிஷேகம் செய்யும் நாள். நடராஜருக்கு வருடத்தில் ஐந்து நாட்கள் மட்டும் அபிஷேகம் செய்வார்கள். அந்த நாள் நாளை வருகிறது. உங்களின் அருகில் இருக்கும் சிவாலயத்திற்க்கு சென்று நடராஜர் அலங்காரத்தை தரிசனம் செய்துவிட்டு வரலாம். 

நாளை வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம். இந்த விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் கடைபிடிக்கலாம் அல்லது ஏதாவது ஒரு லட்சுமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். 

நாளை திருவோண நட்சத்திரம் வருகிறது. புதியதாக ஏதாவது திறக்கவேண்டும் என்றால் இந்த நாளில் திறக்கலாம். நீங்கள் திறக்கும் ஸ்தாபனம் நல்ல முறையில் வளரும்.

நாளை ஓணம் பண்டிகை. கேரள நாட்டில் உள்ளவர்களுக்கான பண்டிகை நாம் பெருமாளை தரிசனம் செய்து நல்ல வாழ்வை தரும்படி வேண்டிக்கொள்ளலாம்.

நமது புதிய பிளாக்கில் இன்றைய பதிவு 

உடலை விட்டு ஆத்மாவை எப்படி வெளியில் பறப்பது 

அதற்கான பயிற்சியை கொடுத்துள்ளேன். புதியதாக இணைய விரும்பும் நண்பர்கள் பணத்தை செலுத்திவிட்டு இணைந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: