Followers

Monday, August 3, 2015

காரிய தடை


ணக்கம்!
          ஒரு செயல் வெற்றி அடைவதற்க்கு மிக முக்கிய காரணமாக அமைவது சோதிடத்தில் ஒன்பதாவது வீடு என்ற பாக்கியஸ்தானத்தால் தான் நடைபெறும்.

காரியம் எல்லாம் கடைசி நேரத்தில் தோல்வியை தழுவுகிறது என்றவுடன் நாம் பித்ரு தோஷம் நமக்கு இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு இருப்போம். பித்ருதோஷம் ஒருபுறம் இருந்தாலும் பாக்கியஸ்தானம் கடுமையாக பாதிக்கும்படும்பொழுது காரியம் கடைசி நேரத்தில் தடங்கலை ஏற்படுத்தி கிடைக்காமல் சென்றுவிடுகிறது.

பாக்கியஸ்தான அதிபதியின் நிலை என்ன என்று உங்களின் ஜாதகத்தில் பார்க்கவேண்டும். மறைவு ஸ்தானத்திற்க்கு சென்றுள்ளதா அல்லது தீயகிரகங்களின் பார்வையில் பாக்கியஸ்தான அதிபதி இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். முக்கால்வாசி பேருக்கு பாக்கியஸ்தானம் பாதிக்கப்பட்டு இருக்கும்.

அவர் அவர்களின் ஜாதகத்தில் பாக்கியஸ்தான அதிபதி யார் என்று பார்த்து அந்த கிரகத்திற்க்கு விஷேசமான பரிகாரத்தை செய்யவேண்டும். பரிகாரம் செய்யமுடியவில்லை என்றால் கூட அந்த கிரகத்திற்க்கு ஓன்பது வாரம் தீபம் ஏற்றி வழிப்பட்டு வரவேண்டும். இப்படி செய்து வந்த பிறகு நாம் தொடங்கும் வேலையை செய்தால் காரிய தடை இன்றி செயல் வெற்றி பெறும்.

ஆடி மாத அம்மன் பூஜைக்கு அனைவரின் பங்களிப்பும் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். தங்களால் முடிந்த காணிக்கையை அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: