Followers

Monday, October 31, 2016

அனுபவமே ஆசான்


ணக்கம்!
          சந்திராதிபதி யோகம் என்று ஒன்று இருக்கின்றது. சந்திரனில் இருந்து 6 7 8 ஆகிய வீடுகளில் குரு சுக்கிரன் புதன் கிரகங்கள் அமையப்பெற்றால் அது சந்திராதிபதி யோகம் என்று பெயர். உலகத்தில் உள்ள அனைத்து நன்மையும் நடைபெறும் என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம்.

சந்திரனுக்கு 6 8 12 வீடுகளில் குரு நின்றால் அது சகடை யோகம் என்கிறார்கள். இது என்ன பலன் என்றால் வண்டிச்சக்கரம் போல் ஏற்றதாழ்வு இருக்கும் என்று சொல்லிவிடலாம்.

இப்பொழுது பாருங்கள். சந்திரனுக்கு ஆறில் குரு நின்றால் சந்திராதிபதி யோகமாக அல்லது சகடையோகமா என்று எப்படி நாம் கண்டறிவது? 

சோதிடத்தில் ஒரு சில குழப்பங்கள்  இயல்பான ஒன்று அதனை நாம் புரிந்துக்கொண்டு அதாவது அனுபவத்தில் அதனை புரிந்துக்கொள்ளவேண்டும். அனுபவம் இல்லை என்றால் சோதிடன் கிடையாது

என்னை பொறுத்தவரை சந்திரனுக்கு மறைவிடத்தில் அதாவது என் அனுபவத்தில் 6 8 யில் குரு நின்றவர்கள் சூப்பரான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள். ஒரு சில விசயங்கள் அனுபவத்தை வைத்து சொல்லுவது நல்லதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

KJ said...

Sir, in My Horo, Guru sits Sixth to Chandran, Sukran sits Seventh to Chandran and Budhan sits Eighth to Chandran.... I have Chandrathipathy Yogam ??

rajeshsubbu said...

வணக்கம் இந்த யோகம் உங்களுக்கு பொருந்தும்.