Followers

Wednesday, November 16, 2016

சாமியே சரணம் ஐயப்பா


ணக்கம்!
         இன்று கார்த்திகை முதல் தேதி சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணியும் பக்தர்கள் மாலை அணிந்திருப்பீர்கள். நமது ஜாதககதம்பத்தை படிக்கும் நண்பர்களும் மாலை அணிந்து இருப்பீர்கள். 

மாலை அணிந்து விரதம் இருக்கும் நாளில் நல்ல ஆச்சாரியமாக கடைபிடியுங்கள். மாலையணிந்துவிட்டு ஏனோ தானாே என்று இருந்துவிடாமல் விரத முறையை கடுமையாக கடைபிடித்து ஐயப்பனின் அருளை பெறுங்கள்.

சமீபகாலமாக பேப்பரில் படித்த செய்தி பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று இருந்தது. நம்ம ஆட்கள் எந்த ஒரு இடத்தையும் விட்டு வைக்கபோவதில்லை என்பது மட்டும் இதனை காண்பிக்கிறது. 

கேரளாவில் பெண்களுக்கு என்று ஒரு சபரிமலையையும் ஆண்களுக்கு என்று ஒரு சபரிமலையும் உருவாக்கி இருக்கிறார்கள். தெரியாமல் இதனை செய்து இருக்கமாட்டார்கள். நமது சக்தி பீடத்தை எல்லாம் உடைக்கவேண்டும் என்ற காரணத்தால் இது நடத்தப்படுகிறது. இதற்கு மேல் இதனைப்பற்றி சொல்லவேண்டாம் நீங்களே புரிந்துக்கொள்ளுங்கள்.

சபரிமலைக்கு செல்லும் நண்பர்கள் பத்திரமாக சென்று வாருங்கள். பயணம் செய்யுமபொழுது பகலில் செல்லுங்கள். வாகனத்தை மிகுந்த கவனத்தோடு இயக்குங்கள். இரயில் டிக்கெட் எடுத்துக்கொண்டு சென்று வருவது நல்லது. சாலை மார்க்கம் விபத்தை தரும் என்பதால் இதனை அதிகம் தவிர்க்கபாருங்கள். ஐயனின் அருளை பெற்று நன்றாக வாழ அம்மனை பிராத்தனை செய்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

Voipadi Kumar said...

பெண்களுக்கு இருக்கும் சபரிமலை எங்கு உள்ளது அய்யா?

rajeshsubbu said...

பெண்களின் ஐயப்பன் கோவில் என்று பகவதிஅம்மனை சொல்லுகின்றனர். அதனை தான் சொன்னேன்.