Followers

Thursday, April 5, 2018

சிறப்பு பதிவு 5


வணக்கம்!
         ஒரு மனிதனுக்கு மரணம் என்பது அவனின் ஏழாவது வீட்டில் இருந்து வரும் என்று சோதிடத்தில் சொல்லியுள்ளனர். ஏழாவது வீடு என்பது மிக மிக முக்கியபங்கு வகிக்கின்றது. பெரும்பாலும் ஏழாவது வீட்டின் வழியாக தான் ஒருவருக்கு மரணம் வருகின்றது.

இன்றைய காலத்தில் என்ன நடக்கும் என்பதை அப்பொழுதே சொல்லிய சோதிடத்தை பார்த்து நாம் வியந்து தான் நிற்க்கவேண்டும். இந்த காலத்தில் ஒருவனுக்கு திருமணம் என்று செய்து வைத்துவிட்டால் அதில் இருந்து அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல ஆரம்பித்துவிடும்.

ஒரேடியாக ஒரு சிலருக்கு இது நடந்தாலும் பலருக்கு கொஞ்சம் கொஞ்சமாக நடந்துக்கொண்டு இறுதியில் முடித்து கட்டிவிடும். அதாவது அவனை கொன்றுவிடும். மனநிலையில் திருமணத்திற்க்கு பிறகு தான் பல மாற்றங்களை கொடுக்க ஆரம்பித்துவிடுகின்றது.

மனநிலையில் மாற்றத்தை கொடுத்தாலும் அது நல்லதாக இருந்தால் பரவாயில்லை ஆனால் கெடுதலாக நடக்க ஆரம்பித்துவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக ஒருவன் நடைபிணமாக மாறிவிடுவான் அதன் பிறகு அவன் மரணத்தை விரைவில் எய்துவிடுவான்.

திருமணம் ஆனவர்கள் அனைவரும் இப்படி தான் இறக்கின்றனர் என்று எண்ணம் வரும். ஒவ்வொருவருக்கும் விகிதசாரத்தில் மாற்றம் இருக்கும் ஆனால் நடப்பது இதன் வழியாக தான் இருக்கின்றது. ஒருவருக்கு இதன் வழியாக தான் மரணம் வரும் அதனை தெரிந்துக்கொள்வதில் கொஞ்சம் சிக்கலாக இருக்கலாம்.

வெளிநாட்டுக்காரன் ஏழாவது வீட்டை எளிதில் எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறான். நம்ம நாட்டுக்காரன் இதற்கு அடிமையாகிவிடுகிறான். நமது கலாசாரம் இப்படி இருந்தாலும் களத்திரவீட்டில் இருந்து மரணத்தை கொஞ்சம் நல்ல படியாக மடைமாற்றம் செய்யவேண்டும்.

களத்திரவீட்டிற்க்கு பரிகாரம் எல்லாம் செய்யவேண்டியதில்லை அதன் உண்மையான காரத்துவத்தை அறிந்துக்கொண்டால் போதும். அதாவது ஒரு திருமணம் என்று நடந்தால் அதன் வழியாக நல்லதும் இருக்கம் கெட்டதும் இருக்கும் என்ற மனநிலையை புரிந்துக்கொண்டுவிடவேண்டும்.

எனக்கு செவ்வாய் எனக்கு தோஷமாக இருக்கின்றது. எனக்கு கோபம் வரும் எனது மனைவி அல்லது கணவன் செய்யும் செயல் எனக்கு அதிகமாக கோபத்தை வரவழைத்துவிடுகின்றது அதனால் எனது மனநிலை பாதிப்பை தருகின்றது என்ற நீங்கள் சொன்னால் அதற்கு தீர்வு நீங்கள் உடனே செவ்வாய் தோஷத்தை போக்கவேண்டும். உங்களின் கோபத்தை போக்க வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு கோபம் வராது.

திருமணம் என்றாலே இப்படி தான் இருக்கும் என்று நீங்கள் தெரிந்துக்கொள்ளவேண்டும். எனது மனைவி அல்லது கணவன் கோபமாக பேசினால் நான் அதனை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை அதனை நினைத்து பல இடங்களில் நான் தனிமையில் இருக்கும்பொழுது கோபபட்டு இருக்கிறேன் என்றாலும் அதுவும் உங்களுக்கு பிரச்சினையை கொடுத்துக்கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு வகையில் உங்களை அது பாதிக்கின்றது அதனால் சொல்லுகிறேன்.

திருமணம் நடக்காதவர்களுக்கு எப்படி மரணம் வரும் என்று கேட்கலாம். பிறவீட்டில் இருந்து வந்தாலும் அவர்களின் மனதில் என்ன இருக்கின்றது என்பதை தெரிந்துக்கொள்ளமுடியாது ஏன் என்றால் அவர்கள் திருமணம் நடக்கவில்லையே என்று ஏங்கிக்கொண்டு கூட இருக்கலாம் அல்லவா.

ஏழாவது வீட்டில் உள்ள கிரகங்கள் தான் மரணத்தை ஏற்படுத்துகின்றது என்பதை எப்படி சொல்லமுடியும். ஏழாவது வீடு தான் காரணம் வகிக்கின்றது என்றாலும் அவர்களின் ஜாதகத்தில் உள்ள தோஷம் இதனை நிர்ணயிக்கும்.

ஒருவருக்கு ஏழாவது நன்றாக இருந்து அவர்களுக்கு சுகஸ்தானம் கெட்டால் அவர்களுக்கு நல்ல சுகம் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் மனது கெட்டு அதன் வழியாக கூட அவர்களின் மனநிலை பாதிக்கும். 

ஏழாவது வீடு மரணம் வருவதற்க்கு ஒரு பாதை. அந்த பாதையில் சென்ற பிறகு தான் பல இடஞ்சல்கள் உருவாகிவிடும். ஒருவருக்கு குரு சரியில்லை என்றால் அவர்களுக்கு அவர்களின் தங்கம் விற்பதில் அல்லது அடகு வைப்பதில் பிரச்சினை ஏற்பட்டு அதனால் கூட மனது பாதிப்படைந்து மரணம் வரும்.

மரணம் என்பது உடனே வருவதை மட்டும் அல்ல கொஞ்சம் கொஞ்சமாக ஒருவனை கொல்லுவதற்க்கு உள்ள காரணியாக ஏழாவது வீடு இருப்பதால் அந்த வீட்டை மரணம் தரும் வீடு என்று சொல்லுகிறோம். அது எப்பொழுது நடக்கும் என்பது அவர் அவர்களின் ஜாதகத்தை பொருத்த விசயமாக அது இருக்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் உள்ள பிற கிரகங்கள் மற்றும் பிற வீட்டையும் வைத்து மரணத்தை கணிக்கவேண்டும். மனைவி அல்லது கணவன் வழியாக மரணம் வருகின்றது என்பதை சொல்லுவதற்க்காக இதனை சொன்னேன்.


நமது கட்டணபதிவில் பல நல்ல கருத்துகளை எல்லாம் நாம் பார்க்க இருக்கிறோம். உடனே நமது நண்பர்கள் அதில் இணைந்துக்கொள்ளுங்கள். காலம் தாழ்த்தாமல் உடனே இணைந்துக்கொள்ளுங்கள்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: