Followers

Thursday, April 26, 2018

அனுபவம்


வணக்கம்!
          நம்ம ஆட்கள் நிறைய பேர் இருக்கின்றனர். நான்  சென்னைக்கு சென்று அங்கிருந்து தொடர்புக்கொண்டால் அட சார் நான் இப்பொழுது சேலத்தில் இருக்கிறேன். ஒரு அவசரவேலையாக சேலம் வந்துவிட்டேன் என்பார்கள். உங்களை சந்திக்க வேண்டும் என்று இருந்தேன் திடீர் வேலை வந்துவிட்டது என்பார்கள்.

ஒவ்வொருவரும் இப்படி ஏதாவது ஒன்றை பொய்யாக சொல்லுவார்கள். உண்மையில் வேலை இருந்து ஒரு சிலர் சென்றாலும் பலர் இப்படி பொய் சொல்லுவது உண்டு. ஏதோ ஒரு காரணத்தால் ஒரு சிலர் தவிர்க்க நினைப்பார்கள். அவர்கள் அதே ஊரில் தான் இருப்பார்கள் என்று எனக்கு தெரியும். இப்படி சொன்னவர்கள் தற்பொழுது இல்லை பல வருடங்களுக்கு முன்பு இப்படி என்னிடம் சொன்னவர்கள் இருக்கின்றனர்.

தற்பொழுது இவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டுவிட்டனர் என்று பார்த்தால் வாழ்க்கையில் எந்த இடத்தில் நின்றார்களோ அதனைவிட குறைவான இடத்தில் நின்றுக்கொண்டு இருக்கின்றனர். அதாவது அதனைவிட மோசமான இடத்தில் இருக்கின்றனர் என்று சொல்லலாம். இதனை உங்களிடம் சொல்லுவதற்க்கு காரணம் கீழே இருக்கின்றது.

ஒவ்வொருவரின் ஜாதகமும் எனக்கு நன்றாக தெரியும். இவர்கள் வாழ்க்கையில் என்ன செய்யமுடியும். எவ்வளவு சம்பாதிக்கமுடியும். எப்படி வாழ்வார்கள் எப்படி சாவு வரும் என்பது எல்லாம் அத்துபடியாக தெரியும்.

ஒருத்தர் நான் பெரிய இடத்தில் இருக்கின்றேன் அல்லது நான் கீழ் இடத்தில் இருக்கின்றேன் என்று சொன்னாலும் அவர்களை நான் எப்படி பார்ப்பேன் என்றால் அவர்களின் ஜாதகம் என்ன சொல்லுகின்றது என்பதை தான் நம்புவேன்.

ஒருவருடைய வாழ்க்கையை மிக துல்லியமாக காட்டுவது அவர்களின் ஜாதகம். ஜாதகத்தை நாம் நன்றாக பார்த்துவிட்டால் போதும் அவர்களின் நிலை என்ன என்பது தெரியும். ஒரு சிலர் ஒரு தசாவின் புத்தியில் நன்றாக இருப்பார்கள் அடுத்த புத்தியில் கஷ்டபட வைத்துவிடும். நிலையான ஒரு ஜாதகம் என்பது கோடியில் ஒருவருக்கு தான் கிடைக்கின்றது. நிலையான ஜாதகம் என்றால் எப்பொழுதும் நன்றாகவே இருக்கும். 

நீங்கள் என்ன தான் பேசினாலும் உங்களின் ஜாதகம் என்ன சொல்லுகின்றது என்பதை பொருத்து தான் உங்களின் வாழ்க்கை அமையும். 

கோயம்புத்தூர், திருப்பூர் பகுதியில் என்னை சந்திக்க விரும்புவர்கள் என்னை தொடர்புக்கொள்ளவும்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: