Followers

Monday, April 23, 2018

வழிகாட்டி


ணக்கம்!
          நாம் என்ன தான் பெரிய ஆன்மீகவாதியாக இருந்தாலும் நமக்கு தெளிவான ஒரு மனம் தேவைப்படுவதற்க்கு நிறைய கோவில்கள் கண்டிப்பாக செல்லவேண்டும். ஒவ்வொரு கோவிலுக்கும் செல்லும்பொழுது நம்மிடம் மறைந்திருக்கும் நல்ல விசயங்கள் வெளிப்படும்.

நம்மை சூழ்ந்திருக்கும் தீயக்கிரகங்களின் ஆதிக்கம் நம்மை கோவிலுக்கு செல்லுவதற்க்கு வழிவிடாது. அதனை மீறி நாம் செயல்பட்டு கோவிலுக்கு செல்லவேண்டும். அப்பொழுது தான் நம்முடைய வழியை சரிசெய்து நிறைய முன்னேற்றங்களை காணமுடியும்.

எத்தனையோ பேரிடம் கோவிலுக்கு செல்லுங்கள் என்று சொல்லுவேன். அதனை நான் சொல்லும்பொழுது சரி செல்கிறேன் என்பார்கள். முக்கால்வாசி பேர் சொல்லுவதோடு முடிந்துவிடும் மறுபடியும் அவர்கள் அதனைப்பற்றி நினைக்கமாட்டார்கள்.

கோவிலுக்கு செல்வதே பெரிய விசயம் இதில் குருவையும் அழைத்துக்கொண்டு செல்லுங்கள் என்று சொன்னால் சுத்தமாக செல்லமாட்டார்கள். நீங்கள் தனியாக ஒரு கோவிலுக்கு செல்வதிலும் குருவோடு செல்வதிலும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

நீங்கள் யாரை குருவாக நினைக்கின்றீர்களோ அவர்களோடு கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு அமைந்தால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சென்றுவிடுங்கள்.மிகப்பெரிய பாக்கியம் என்பதே குருவோடு கோவிலுக்கு செல்வது மட்டுமே என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.

ஒவ்வொருவரும் செயல்படுவதே அவர்களின் ஜாதகத்தை பொறுத்த செயலாக தான் இருக்கும். ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் நல்ல பலனை கொடுக்கிறது என்றால் கண்டிப்பாக நீங்கள் நல்ல பலனை எடுத்துவிடலாம். குரு உங்களுக்கு வழிகாட்டுவது போல இருக்கும். தீயகிரகங்கள் பலனை கொடுக்கிறது என்றால் குருவை நீங்கள் விட்டுவிடுவீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: