Followers

Monday, April 2, 2018

ஜாதக அனுபவம்


வணக்கம்!

               பொதுவாக ஒரு ஜாதகத்தில் அதிகப்பட்சம் தண்டனை தருவது அவர்களுக்கு நடைபெறும் மறைவுஸ்தானம் என்றாலும் ஒரு சில காலக்கட்டத்தில் கோச்சாரபலனும் அதிக தண்டனை தந்துவிடுவது உண்டு.

கோச்சாரபலன் தண்டனை தருவதற்க்கு காரணம் அவர்களுக்கு நடைபெறும் தசாநாதன் எந்தவிதத்திலும் நன்மை தரவில்லை என்ற காரணத்தால் தான் இப்படி கோச்சாரபலன்கள் அதிகபலம் வாய்ந்தவையாக மாறுகின்றன.

கோச்சாரபலன் தண்டனை தருவது என்பது கொஞ்ச காலம் என்றாலும் அது அதிக சக்தியோடு ஒரு சிலருக்கு கொடுத்துவிடுகிறது. அப்பொழுது அவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

கோச்சாரபலனின் பலம் குறைய அந்தந்த கோச்சாரகிரகத்திற்க்கு வழிபாடு செய்தாலும் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற தசாநாதனுக்கு பலம் சேர்க்க என்ன வழி என்று யோசித்துவிட்டால் போதும். தசாநாதன் வலு சேர்த்துவிட்டால் அதன் பிறகு வருகின்ற கோச்சாரபலனும் எதுவும் செய்துவிடமுடியாது.

ஒரு சில தசாநாதனுக்கு கடைசிவரை வழிபாடு போன்ற விசயங்களில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே பலன் தரும் விதத்தில் இருக்கும். அவர் அவர்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு தசாநாதன் எப்படி இருக்கின்றது என்பதை பார்த்து அதற்கு வழிபாடு செய்துக்கொள்ளுங்கள்.

இன்று மதுரை செல்கிறேன். மதுரையில் சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800  

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: