Followers

Tuesday, April 17, 2018

ராகு தசா


ணக்கம்!
         ஒருவருக்கு ராகு தசா நடந்தால் அவரின் செயல்பாடுகள் அதிகமான வித்தியாசம் தெரியும். செவ்வாய் தசா நடந்ததில் இருந்து ராகு தசா பெரிய வித்தியாசத்தை தந்துவிடும். பெரும்பாலும் அனைவரின் பார்வையிலும் இவர்கள் சந்தேக கண்ணோடு பார்க்க வைத்துவிடும்.

பாம்பின் தசா என்பதால் பதுங்கிக்கொண்டு தான் இருப்பார்கள். வெளியில் வந்து பயமுறுத்தினாலும் பாம்பை அடிப்பது போல் பிறர் அடித்துவிடுவார்கள் என்ற பயம் இருந்துக்கொண்டே இருக்கும். செயல்பாடு அனைத்தும் மறைமுகமாகவே இருப்பதால் இவர்களுக்கு பெரிய அங்கீகாரம் இருக்காது என்று சொல்லலாம்.

ஒருவர் வெளியில் நன்றாக தெரியவேண்டும் என்றால் அவர்க்கு குரு  தசா நடக்கவேண்டும். ராகு தசாவில் ஒருவர் பெரியளவில் வெளியில் தெரிந்தாலும் அவரை வில்லங்கமானவர் என்று சொல்லுவார்கள். அவரின் பெயர் கெட்டப்பெயராகவே இருக்கும்.

ராகு தசா நடக்கும்பொழுது மனதளவில் மாற்றம் நிறைய வந்துவிடும். மனம் போகின்ற போக்கில் செல்லும். அதனை தடுத்து நிறுத்தவிட்டால் அவர்க்கு நிறைய பிரச்சினை மனதளவிலும் ஏற்படும். மனமும் கெட்டு உடலும் சக்தி இல்லாமல் போய்விடும்.

ஒருவருக்கு கெட்ட ஆத்மாக்களின் தொடர்பு ஏற்பட்டு அவர்களின் செயல்பாட்டை தடுத்து அவரின் உடலில் இருந்து சக்தியை உறிஞ்சிவிடும். இது அனைத்தும் ராகு தசாவில் தான் அதிகம் நடைபெறும்.திடீர் என்று ராகு தசாவை ஏன் எழுதுகிறேன் என்றால் இப்படிப்பட்ட ஒரு ஜாதகத்தை இன்று பார்த்தேன். அதனால் உங்களுக்கு மறுபடியும் நினைவூட்ட இதனை எழுதுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: