Followers

Monday, April 9, 2018

சிறப்பு பதிவு 9


வணக்கம்!
          லக்கினம் என்பது முக்கியம் என்று சொல்லிருந்தேன். லக்கனத்தை வைத்து தான் ஒவ்வொரு பலனையும் கண்டுபிடித்து சொல்லிக்கொண்டு இருக்கிறோம். எந்த வகையில் சோதிடம் கணித்தாலும் லக்கனம் எது என்பதை பார்த்து அதன் பிறகு அனைத்து வீட்டிற்க்கும் பலனை சொல்லுவார்கள்.

ஒருவர் எனக்கு இதுதான் லக்கனம் என்று சொன்னாலே போதும் உடனே அனைத்து பலனையும் நாம் சொல்லிவிடலாம். அதாவது அவரின் ஜாதகத்தை பார்க்காமல் ஒரளவு நாம் இப்படி தான் இருக்கும் என்பதை சொல்லிவிடலாம். அதன் பிறகு கிரகங்கள் அமர்ந்த பலனை எல்லாம் பார்த்துவிட்டு சொல்லலாம்.

லக்கனாதிபதிக்கு நிறைய அந்தஸ்தை சோதிடம் கொடுக்கும். லக்கனாதிபதி நன்றாக இருந்தால் தான் அவரின் உயிர் நன்றாக இருக்கும். லக்கனாதிபதி மறைவு ஸ்தானத்திற்க்கு சென்றுவிடகூடாது. லக்கனாதிபதி நன்றாக இருக்கவேண்டும் என்று சொல்லுவார்கள்.

ஒருவருக்கு லக்கனாதிபதி நன்றாக இருந்தால் அவர்க்கு பெரிய கஷ்டம் எல்லாம் வராது. லக்கனாதிபதி அனைத்து பிரச்சினையில் இருந்தும் அவரை காப்பாற்றிவிடுவார். ஒரளவு லக்கனாதிபதி இழுத்து கொடுத்துவிடும் என்று சொல்லுவார்கள்.

மேஷம் மற்றும் துலா லக்கனத்திற்க்கு ஒரு வேடிக்கையாக ஒன்று இருக்கும். இந்த இரண்டு லக்கனத்திற்க்கும் அஷ்டாமாபதியாக இவர்களின் லக்கனத்தின் அதிபரே வருவது தான் வேடிக்கை என்று சொல்லுகிறேன். 

லக்கனாதிபதி அஷ்டாமதிபதியாக வருவதால் ஒரு சில பிரச்சினைகளை இவர்கள் வாழ்வில் சந்திப்பார்கள் என்று சோதிடத்தில் சொல்லுவார்கள். மேஷ லக்கினாதிபதி ஏழாவது வீட்டில் சென்று அமருகிறார் என்று வைத்துக்கொள்வோம். இவர் லக்னாதிபதியாக சென்று அமர்ந்து இருக்கிறாரா அல்லது எட்டுக்கு உடையவராக இருப்பவர் ஏழில் சென்று அமர்ந்திருக்கிறாரா என்று எதனை வைத்து சொல்லுவது?

லக்கினாதிபதி அஷ்டமாபதியாக வருவதால் இவர்களின் நடவடிக்கையை பார்த்தாலும் வித்தியாசமாக இருக்கும். மேஷ லக்கனம் அல்லது மேஷ ராசி என்பதை எடுத்துக்கொள்வோம். இவர்களின் நடவடிக்கை எப்படி என்றால் கொஞ்சநாள்கள் நன்றாக பழகுவார்கள் அதன்பிறகு எங்கு செல்கின்றனர் என்பது தெரியாது. இதில் ஒரளவுக்கு துலாராசி பரவாயில்லை என்று சொல்லலாம்.

கிரகங்களை நாம் ஜெயிக்கவேண்டும் என்றால் முதலில் கிரகங்கள் சொல்லுவது போல நாம் இருக்ககூடாது. ஒரு சோதிடன் கணித்து நம்மளை கண்டுக்கொள்ளகூடாது. ஒவ்வொரு ராசியையும் சொன்னாலே நாம் இவர்கள் இப்படி தான் இருப்பார்கள் என்று சொல்லிவிடலாம். கிரகங்களை ஜெயித்தவன் சோதிடம் சொல்லுவது போல இருக்கமாட்டான்.

ஒரு மனிதனை எப்படி முதலில் எடைபோடுவார்கள். அவன் பழகும் விதத்தில் தான் எடைபோடுவார்கள். இதில் முதலில் மாற்றத்தை கொண்டு வந்துவிட்டாலே போதும். உங்களை சோதிடத்தில் வைத்து கணித்துவிடமுடியாது. 

கிரகங்களின் கட்டுபாட்டில் நீங்கள் இருப்பதை நீங்கள் உறுதி செய்துவிடகூடாது. நான் அதனை மீறி செயல்படுவேன் என்று உறுதி உங்களின் மனதில் இருந்தால் கிரகங்களை ஜெயித்துவிடலாம். நானே ஒரு சில காலக்கட்டத்தில் கிரகங்களின் கட்டுபாட்டில் தான் இருந்தேன். இதனை எல்லாம் புரிந்துக்கொண்டு அதில் இருந்துவிடுபட்டேன். 

ஜாதக கதம்பத்தின் கட்டண பதிவு விரைவில் துவங்கஉள்ளது. உடனே கட்டணத்தை செலுத்தி அதில் இணைந்துக்கொள்ளுங்கள். கட்டணபதிவு துவங்கியவுடன் கட்டணம் ஏற்றபடுவதற்க்கு வாய்ப்புகள் உள்ளன. உடனே விரைந்து இதில் இணைந்துக்கொள்ளுங்கள்.

இன்று சேலம் செல்கிறேன். நாளை சேலத்தில் என்னை சந்திக்கலாம். சந்திக்க விரும்பும் நண்பர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும். 

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: