Followers

Wednesday, April 25, 2018

இராமேஸ்வரம்


ணக்கம்!
          இராமேஸ்வரத்தைபபற்றி எழுதவேண்டும் என்று இன்று தோன்றியது. பாவங்களை தீர்க்கும் வழிகளைப்பற்றி சொல்லும்பொழுது இதுவும் எனக்கு தோன்றியது. இன்று என்ன எண்ணம் வருகின்றதோ அதனை பதிவில் கொடுத்துவிடுவது உண்டு.

சோதிடத்தில் கிரகங்கள் நிறைய பிரச்சினை கொடுத்தாலும் கிரகங்களுக்கு என்று தனித்தனி கோவில் இருந்து அதற்கு தீர்வு இங்கு செல்லலாம் என்றாலும் முக்கியமாக நமது பாவங்களை ஒட்டுமொத்தமாக கரைக்கும் ஒரு இடம் தான் இராமேஸ்வரம்.

வடக்கில் கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்பார்கள் அல்லவா. அதனைவிட மிக உயர்ந்த ஒரு இடம் இராமேஸ்வரம். இதனைப்பற்றி நிறைய பதிவுகள் கொடுத்து இருக்கிறேன். உங்களுக்கு மீண்டும் மீண்டும் கொடுப்பதின் அர்த்தம். இதனை உங்களுக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும் என்பதற்க்காக கொடுக்கிறேன்.

இராமேஸ்வரத்திற்க்கு சென்றுவருவது என்பது ஒருவருக்கு பல தடங்கல் கொடுக்கும். அதனையும் மீறி ஒருவர் சென்று வந்தால் அவர்க்கு பாவம் போகும். இராமேஸ்வரம் சென்று அங்கு கடலில் நீராடிவிட்டு அதன்பிறகு புண்ணிய தீர்த்தகிணறுங்களில் குளித்துவிட்டு அதன்பிறகு சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

ஒரு நாள் அங்கு தங்கிவிட்டு மறுநாள் வாருங்கள். உங்களுக்கு நல்லது நடக்கும். விடியற்காலையில் கோவிலில் நடக்கும் பூஜையிலும் கலந்துக்கொண்டு தரிசனம் செய்துவிட்டு வருவது சிறப்பு.

கிரகங்களின் கொடுமையில் இருந்து தப்பிக்கவும் அதனை சாந்தப்படுத்தவும் இதனை நீங்கள் அடிக்கடி செய்யலாம். குலதெய்வத்திடம் வேண்டிவிட்டு இராமேஸ்வரம் சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

நாளை கோயம்புத்தூர், திருப்பூரில் என்னை சந்திக்கலாம். சந்திக்க விரும்புவர்கள் உடனே என்னை தொடர்புக்கொள்ளலாம்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: