Followers

Friday, April 6, 2018

சிறப்பு பதிவு 7


வணக்கம்!
                ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி சமீபத்தில் ஒன்றை படித்தேன். இந்தியாவிற்க்கு வந்து அவர் இமயமலைக்கு சென்று இருக்கிறார். அவர் ஞானத்தை தேடி இந்தியா வந்தாலும் பல ஏமாற்றங்கள் அவர்க்கு இங்க இருந்திருக்கின்றது. இந்தியாவில் இருந்து திரும்பிய ஜாப்ஸ் சொல்லிருக்கிறார். வாழ்க்கையில் எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் இந்தியாவில் கிடைத்தது என்று சொல்லிருக்கிறார்.

உலகமே அவரைப்பற்றி பேச வைத்தற்க்கு இந்தியாவில் உள்ள ஆசீர்வாதம் மிக முக்கிய காரணமாக நாம் எடுத்துக்கொள்ளலாம். பல ஞானிகளின் ஆசீர்வாதம் அவர்க்கு கிடைத்த காரணத்தாலும் அவர் மேலே வந்தற்க்கு ஒரு காரணமாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.

நம்ம ஆட்கள் என்ன சொல்லிருப்பார்கள் இந்தியாவில் உள்ள சாமியார்கள் எல்லாம் ஏமாற்றவர்கள். திருட்டுபயல்கள் என்று அனைவரிடமும் சொல்லிருப்பார்கள். அவரின் பார்வைக்கும் நமது பார்வைக்கும் எந்தளவுக்கு வித்தியாசம் இருக்கின்றது என்பது இந்த நிகழ்வை வைத்தே தெரிந்துக்கொள்ளலாம்.

இந்தியாவில் பல நல்ல ஆசீர்வாதம் இருக்கின்றது நம்ம ஆட்கள் அதனை பெற்று பயன்படுத்துவது கிடையாது. அனைத்தையும் மேம்போக்கவே எடுத்துக்கொண்டு ஏதோ வாழ்கிறோம் என்று வாழ்ந்துவிட்டு சென்றுவிடுவார்கள். எவ்வளவு தான் சோதிட கருத்துகள் இருந்தாலும் அதனை பயன்படுத்தும் விதத்தில் தான் வெற்றி இருக்கின்றது.

இந்தியாவில் உள்ள நிறைய இடங்கள் மற்றும் கோவில்கள் புண்ணிய தீர்த்தங்களை நீராடிவிட்டு வாருங்கள். உங்களின் அனைத்து கர்மாவும் சென்றுவிடும். உங்களின் பார்வையில் ஒரு தெளிவு ஏற்பட்டு அதன் பிறகு உங்களின் வாழ்க்கையே மாறிவிடும்.

வெளிநாட்டுக்காரன் எல்லாம் இந்தியாவில் ஆசீர்வாதம் கிடைக்கும் அதனை வைத்து நாம் பெரிய ஆளாக மாறிவிடலாம் என்று இந்தியாவை நோக்கி வருகிறார்கள். நாம் இங்கு இருந்துக்கொண்டு எதனையும் செய்யாமல் வாழ்க்கையில் ஒன்றுமே நடக்க மாட்டேன்கிறது என்று உட்கார்ந்துக்கொண்டு இருக்கிறோம்.

உலகத்தில் உள்ள பெரிய ஆட்களை எல்லாம் கொஞ்சம் உற்று பார்த்தால் அவர்கள் இந்தியாவோடு ஒரு தொடர்பை வைத்திருப்பார்கள். தொடர்பு என்பது சாமியாராக இருக்கலாம் அல்லது ஏதோ ஒரு கோவிலாக இருக்கலாம். இந்த தொடர்பு அவர்களை பெரிய அளவில் மாற்றும் சக்தியை கொடுக்கும்.

நாம் ஒரு சோதிடரிடம் சென்றால் கூட அவரைப்பற்றி சந்தேக கண்ணோடு பார்ப்போம். அவர்க்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை என்றாலும் அவர் நல்லவரா கெட்டவரா என்று மனது கணக்கு போட்டுக்கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட மனநிலையை மாற்றி அவரிடம் இருந்து நாம் என்ன பெறலாம் என்று கணக்கு போட்டால் நாம் நிறைய பெற்றுவிடலாம். 

இல்லறத்தில் இருப்பவர்கள் தங்களின் குடும்பத்தினர்க்கு என்ன செய்யலாம். அவர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கின்றது அதனை எப்படி ஆன்மீகவழியில் சரிசெய்து கொடுப்பதில் அதிக அக்கறை காட்டவேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு ஆன்மீக வழியில் ஒரு இல்லறதலைவன் அல்லது தலைவி செய்துக்கொடுக்கும் உதவி உங்களின் வாரிசுகளை பெரியளவில் உயர்த்திக்கொடுக்கும். அவர்களின் வாழ்க்கைக்கு பல நல்ல முன்னேற்றங்களை கொடுக்கும்.

பல ஊர்களில் நான் பார்த்து இருக்கிறேன். சும்மா கோவில் கோவிலாக அலைந்த குடும்ப தலைவனின் வாரிசுகள் இன்றைக்கு பெரியளவில் இருக்கின்றனர். பெரிய குடும்பம் என்று சொல்லிக்கொண்டு அக்கபோர் செய்துக்கொண்டு இருந்த குடும்பத்தின் வாரிசுகள் இன்று பெரியளவில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

ஒரு வாரிசு சரியில்லை என்றால் அதற்க்கு நாம் எங்கோ தவறு செய்து இருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு அதற்கு என்ன செய்யவேண்டும் என்று முடிவு எடுக்கவேண்டும். நாம் அடுத்தவர்களை கை காட்டகூடாது. இதற்கு தீர்வு என்பது பல சாமியார்களிடம் இருந்து ஆசி வாங்குவது. பல கோவில்கள் சென்றுவருவது தான் இதற்கு எல்லாம் தீர்வாக இருக்கும். இதனை நீங்கள் தான் செய்யவேண்டும்.



ஒருவரின் வாழ்க்கையே மாற்றி போடுவதில் தசாநாதனுக்கு அதிக பங்கு இருக்கும். எப்படிப்பட்ட கோச்சாரபலன் வந்தும் மாறாதவர்கள் ஒரு தசா முடிந்து அடுத்த தசா ஆரம்பித்துவிட்டால் அவர்கள் முழுவதுமாக மாறிவிடுவார்கள். 

ஒரு நல்ல மனிதன் கெட்டவனாக மாறுவதற்க்கும் ஒரு கெட்டவன் நல்லவனாக மாறுவதற்க்கும் தசாநாதன் மிக மிக முக்கியம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு வந்திருக்கும் பிரச்சினை நீண்டகால பிரச்சினையாக வந்துக்கொண்டு இருந்தால் உங்களின் தசாநாதன் தசாவை முடிக்கும்பொழுது அல்லது தசாநாதனின் வீரியம் குறையும்பொழுது தான் அந்த பிரச்சினை முடியும்.

ஒருவருக்கு நீண்டகால பிரச்சினை என்று வந்தால் தசாநாதன் தான் இதனை கொடுக்கிறது என்று நீங்கள் தெரிந்துக்கொண்டால் தசாநாதனின் வீரியத்தை குறைக்க குறைந்தது ஆறு மாதத்திற்க்கு ஒரு முறை தசாநாதனுக்கு பரிகாரம் அல்லது அதற்கு தகுந்த ஒன்றை நீங்கள் செய்துக்கொண்டே இருக்கவேண்டும்.

ஒரு தசாநாதனுக்கு சோதிடர்கள் சொல்லும் பலனை விட நீங்களே அதனை உற்றுநோக்கினால் நிறைய மாறுதல்கள் நடந்துக்கொண்டு இருக்கும். அதாவது சோதிடர்கள் சொன்னதை விட உங்களுக்கு அதிகமாகவே நடக்கும். சோதிடர்கள் சொன்னதற்க்கும் உங்களுக்கு நடந்துக்கொண்டு இருப்பதற்க்கும் வித்தியாசம் தெரிந்தால் நீங்களே அதற்கு என்ன செய்யலாம் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

ஒரு மறைவுஸ்தானத்தில் இருந்து ஒரு தசா நடந்தால் அதனை மட்டும் எளிதில் எடுத்துக்கொண்டு இருந்துவிடகூடாது. ஏன் என்றால் அது பணத்தை கொட்டிக்கொடுத்தாலும் ஒரு சில நேரத்தில் உயிரை எடுக்கவும் தயங்காது. மறைவுஸ்தானத்தின் தசா என்றாலே அது உங்களுக்கு உடல் ரீதியாக பல தொந்தரவுகளை கொடுத்துவிடும்.

ஒரு சில முக்கியமான கருத்துக்களை எல்லாம் கட்டண பதிவில் பார்க்கலாம். சிறப்பு பதிவில் எழுதுவதைவிட அதில் சிறந்த முறையில் எழுதியிருக்கிறேன். கட்டணபதிவில் உடனே சேர்ந்துக்கொள்ளுங்கள். விரைவில் கட்டண பதிவு தொடக்கப்பட இருக்கின்றது.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: