Followers

Friday, April 27, 2018

கோவில் தரிசனம்


வணக்கம்!
          நான் எந்த ஊருக்கு சென்றாலும் அங்குள்ள கோவில்களை தரிசனம் செய்வது உண்டு. இதனை நமது நண்பர்களோடும் செய்து இருக்கிறேன். நான் உங்களின் ஊருக்கு வரும்பொழுது நீங்கள் விரும்பினாலும் இதனை செய்யலாம்.

கோவில்களுக்கு நீங்கள் தனியாக சென்றாலும் உங்களோடு நான் வரும்பொழுது கண்டிப்பாக உங்களுக்குள் ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கமுடியும். இது அனைத்தும் குருவிற்க்கு நன்றியை சொல்லவேண்டும்.

ஒரு கோவிலுக்கு செல்லும்பொழுது நீங்கள் தனியாக சென்றால் கிடைக்கும் அனுபவத்திற்க்கும் ஒரு ஆன்மீகவாதியோடு சென்றால் கிடைக்கும் அனுபவத்திற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. நான் தான் உங்களோடு வரவேண்டும் என்பதில்லை உங்களுக்கு தெரிந்த நல்ல ஆன்மீகவாதியோடு செல்வதும் நல்லது.

ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் உள்ள சக்தியை நன்றாக உணர்வதற்க்கு ஆன்மீகவாதிகள் துணைபுரிவார்கள். நம்முடைய கோவில்களில் குறைகள் கிடையாது நம்முடைய உடலில் குறைகள் இருக்கும். இதனை சரிசெய்வதற்க்கு ஆன்மீகவாதிகள் உங்களுக்கு உதவுவார்கள்.

பரிகாரத்திற்க்கு நீங்கள் கோவிலுக்கு சென்றால் ஒரு இரவு தங்கிவிட்டு மறுநாள் வாருங்கள். சாதாரணமாக கோவிலுக்கு சென்றால் ஒரே நாளில் வந்துவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: