Followers

Sunday, April 15, 2018

கட்டண சேவை தொடக்கம்


வணக்கம்!
         நமது கட்டண சேவை பதிவு நேற்று தொடங்கப்பட்டுவிட்டது. தங்களை இணைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இணைய போகும் நண்பர்களுக்கு இந்த பதிவு. ஜாதக கதம்பம் படிப்பது ஒரு நல்ல அனுபவமாக உங்களுக்கு தோன்றினால் கண்டிப்பாக நீங்கள் இந்த கட்டண பதிவிலும் இணைத்துக்கொள்ளுங்கள்.

கட்டண சேவை என்பது ஒரு லாபத்திற்க்கு மட்டும் ஆரம்பிக்கப்பட்டது அல்ல மாறாக ஒரு சில பாதுகாப்பான இரகசியமான விசயங்களை எல்லாம் ஆவல் இருப்பவர்கள் தெரிந்துக்கொள்ளட்டும் என்பதற்க்காக ஆரம்பித்து இருக்கிறேன்.

கட்டணசேவையில் இணைந்தவர்கள் அனைவரும் எனக்கு நன்றாக தெரிந்த நண்பர்கள். ஜாதக கதம்பம் படித்தோம் அதோடு சென்றுவிட்டால் போதும் ஏன் நாம் தேவையில்லாமல் பணத்தை விரையம் செய்ய வேண்டும் என்று பணத்தை சேமிக்கவேண்டியதில்லை. நீங்கள் செலுத்தும் பணம் உங்களை மிகப்பெரிய செல்வந்தராக மாற்றக்கூடிய கருத்துக்கள் கட்டணசேவையில் இருக்கின்றன.

என்னுடைய இலக்கு என்பது இதில் வந்தவர்கள் அனைவரையும் அதில் இணையவைத்துவிடவேண்டும் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன். எனக்கு வருமானம் ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு சில நல்ல விசயங்களை கட்டணம் செலுத்தி தான் பெறவேண்டும் என்பதற்க்கு இதனை சொல்லுகிறேன்.

நண்பர்களே உடனே  இணைந்துவிடுங்கள். இன்னமும் கட்டணம் உயர்த்தப்படாமல் இருக்கின்றது. பத்தாயிரம் கட்டணத்தை செலுத்தி இணைந்துக்கொள்ளுங்கள்.


ஒவ்வொரு ஊரிலும் மாரியம்மன் கோவில் இருக்கும். மாரியம்மன் கோவிலுக்கு ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடக்கும். மாரியம்மன் கோவில் ஆண்டு ஒருமுறை திருவிழாவின் பொழுது படையல் என்ற ஒரு நிகழ்ச்சி நடக்கும். இன்று எங்களின் ஊரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு திருவிழா. அனைத்துவீடுகளிலும் படையல் நிகழ்ச்சி நடக்கும். அதனை முன்னிட்டு இன்று எங்களின் வீட்டில் படையல் நிகழ்ச்சி நடக்கிறது. 

ஒவ்வொரு வருடமும் நல்ல மழை பெய்வதற்க்கு மாரியம்மனுக்கு திருவிழா செய்வார்கள். கடந்த இரண்டு நாட்களாக மழை என்றால் அப்படி ஒரு மழை பெய்து இருக்கின்றது. இன்றும் மழை வருவதற்க்கு ஒரு சூழல் நிலவுகின்றது. அனைத்தும் மாரியம்மன் அருளால் நடக்கிறது.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: