Followers

Sunday, April 15, 2018

நட்சத்திரம்


வணக்கம்!
          ஏற்கனவே அஸ்வினி நட்சத்திரத்தைப்பற்றி பார்த்து இருக்கிறோம். இந்த நட்சத்திரத்தைப்பற்றி எழுத ஆரம்பித்தப்பொழுது தான் எனக்கு ஒன்று தோன்றியது சிறப்பு கட்டண பதிவை ஆரம்பிக்கவேண்டும் என்பது தான் அது. இன்றைக்கு கட்டண பதிவு ஆரம்பித்து நல்லபடியாக சென்றுக்கொண்டு இருக்கின்றது. கேதுவின் நட்சத்திரம் ஞானத்தை கொடுக்கும் என்பார்கள் ஆனால் எனக்கு அது நல்ல வழியை காட்டியிருக்கிறது. அந்தளவுக்கு கேது பகவான் வாரி வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

பொதுவாக பாம்பு கிரகங்கள் அதிகமான தடைகளை கொடுத்து அதன்பிறகு நல்லவழியை கொடுக்கும் என்பார்கள். எனக்கும் கட்டண பதிவை ஆரம்பிக்கும்பொழுது நிறைய தடைகளை கொடுத்தது. கட்டண பதிவை ஆரம்பிக்கும் சூழல் அப்பொழுது நிலவவில்லை என்ற சொல்லலாம்.

ஜாதககதம்பத்தில் சிறப்பு பதிவை கொடுத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாறியது. பலர் இன்றைக்கு அதில் தன்னை இணைத்துக்கொண்டு வருகின்றனர். இன்னமும் கொஞ்சநாள் சென்றால் அனைவரும் அதில் இணைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

அஸ்வினி நட்சத்திரத்தைப்பற்றி ஒரளவுக்கு பழைய பதிவில் கூட கொடுத்து இருக்கிறேன். அஸ்வினி நட்சத்திரம் என்பது பெரியளவில் சாதிக்க வேண்டும் என்று துடிப்பு இருக்கும் ஒரு நட்சத்திரம். வேகம் சக்தி சுறுப்புப்போடு செயல்படுவார்கள். இன்றைக்கு அந்த வேகத்தை நான் உணர்ந்து இருக்கிறேன்.

அஸ்வினி நட்சத்திரத்திற்க்கு உள்ள  சமயம், மந்திரம் மற்றும் அமானுாஷ்ய சக்தி எல்லாம் அதிக விரும்புவார்கள். இதனையும் நமது புதிய தளத்தில் அதிகமாக நான் சொல்ல இருக்கிறேன் என்பது தான் உண்மை.

ஒரு நட்சத்திரத்தில் நாம் ஆரம்பிக்கும்பொழுது அதனைப்பற்றிய அனைத்து குணங்களும் ஒட்டிக்கொள்ளும் என்பதற்க்கு ஒரு உதாரணத்திற்க்காக இதனை சொல்லுகிறேன். நமது கட்டண பதிவில் சோதிடம் மட்டும் அல்லாமல் மேலே சொன்ன விசயத்தையும் சொல்லிக்கொண்டு வருகிறேன். நேற்று ஆரம்பித்து இன்றைக்கு மூன்று பதிவு தந்திருக்கிறேன். மூன்று பதிவிலும் மேலே சொன்ன விசயங்கள் எல்லாம் இருக்கின்றன.

அஸ்வினி நட்சத்திரகாரர்கள் எடுக்கும் முடிவும் நன்றாகவே இருக்கும். அதேபோல் இந்த பதிவிலும் நான் சொன்ன விசயம் மற்றும் சொல்லபோகின்ற விசயம் அனைத்தும் நல்லதாகவே இருக்கும். கட்டணபதிவில் வீசும் தென்றல் கொஞ்சம் ஜாதககதம்பத்திலும் அடிக்கும் ஆனால் கொஞ்சமாக இருக்கும். உடனே இணைந்து மேலும் பல தகவல்கள் தெரிந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: