Followers

Tuesday, April 24, 2018

பாவம் போக்கும் வழிபாடு


வணக்கம்!
          பாவம் பாேக்க வேறு வழி உண்டா என்று நண்பர் ஒருவர் கேள்வி அனுப்பியிருந்தார். உலகத்தில் உள்ள வழிபாடுகள் மற்றும் கோவில்கள் எல்லாம் மக்களின் பாவத்தை போக்கி நல்வழிப்படுத்த தான் இருக்கின்றன.

மிக அதிகமான கொடூரமான பாவங்கள் எல்லாம் தீர்க்கும் வல்லமை படைத்தது சிவ வழிபாடு என்பார்கள். சிவனை தொடர்ச்சியாக வழிபடுபவர்களுக்கு பாவங்கள் நீக்கி நல்ல வழியை தரும் என்பது ஆன்மீகவாதிகளின் கருத்து.

சிவ வழிபாட்டில் லிங்க வழிபாடு மிகச்சிறந்த ஒன்று. லிங்க வடிவில் இருக்கும் சிவனை வழிபடுவர்களுக்கு பாவங்கள் போய்விடும். கடந்த காலத்தில் சிவாராத்திரி மற்றும் பிரதோஷ காலங்களில் உங்களின் வீட்டில் சிவ வழிபாட்டை செய்ய சொல்லிருந்தேன்.

சிறிய லிங்கத்தை வாங்கி நீங்களே அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டு வாருங்கள் என்று சொல்லிருக்கிறேன். ஒரு சிலர் மட்டும் இதனை செய்து வந்தனர். அதேப்போல கூட நீங்கள் செய்து வரலாம். சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்ய முடியாதவர்கள் சிவன் கோவிலில் சென்று வழிபட்டு வாருங்கள்.

முற்பிறவியில் செய்த பாவங்கள் எல்லாவற்றையும் களைந்து உங்களுக்கு நல்ல வழியை செய்யக்கூடிய ஒரு வழிபாடு. இதனை மட்டும் செய்து ஒருவர் பாவத்தை போக்கிவிடமுடியும்.

ஜாதக கதம்பத்தின் கட்டண சேவை இயங்கிக்கொண்டு இருக்கின்றன. உடனே அதில் இணைந்து நிறைய கருத்துக்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: