Followers

Friday, June 1, 2018

இனிய தொடக்கம்


வணக்கம்!
          இந்த மாதமும் அதிகமான பதிவுகளை தரவேண்டும் என்று அம்மனிடம் வேண்டிக்கொண்டு ஆரம்பிக்கிறேன். ஒரு சில நல்ல கருத்துக்களை நாம் மனதில் வைத்து செயல்பட்டாலே போதும் அது நம்முடைய வாழ்க்கையை நல்ல திசையில் இழுத்து செல்லும்.

நமக்கு நிறைய உதவிகள் மற்றும் பழக்கவழக்கத்தில் ஒருவர் இருப்பார். ஏதோ ஒரு காரணத்தால் அவர் ஒரு தவறை செய்துவிட்டால் நாம் உடனே அவர்களை வெறுக்க தொடங்கிவிடுவோம். அவர் மீது நாம் வெறுப்புகளை அள்ளி வீச தொடங்கிவிடுவோம்.

ஆயிரம் நல்லதை செய்தவர்கள் ஒரு தவறை மட்டும் செய்தவுடன் நாம் ஆயிரம் நல்லதை விட்டுவிட்டு ஒரு தவறை மட்டும் எடுத்துக்கொள்வோம். மனது அப்படி தான் செய்யும். தவறை மட்டும் மறுபடியும் மறுபடியும் கொண்டு வந்து காட்டிக்கொண்டே இருக்கும்.

மனது மறுபடியும் தவறை காட்டிக்கொண்டே இருப்பதால் அவர் தவறானவர் என்று முடிவுகட்டிவிடுவீர்கள். ஆயிரம் நல்லது போய்விடுகின்றது. இப்படி மட்டும் ஒருவரை முடிவு செய்யக்கூடாது அவர் என்ன தான் தவறை செய்தாலும் அதனை எல்லாம் பொருட்ப்படுத்தாமல் அவரிடம் எப்பொழுதும் போலவே பழகவேண்டும்.

தவறை பட்டியல் போடும் மனநிலையை நாம் அகற்றிவிட்டாலே போதும் நிறைய நமக்கு நல்ல வாய்ப்பை இறைவன் கொடுப்பான். நிறைய விசங்கள் நமக்கு சாதகமாகவே அமைய தொடங்கிவிடும். இதுவரை சண்டை போட்டவர்கள் எல்லோரையும் நீங்களே கூப்பிட்டு நன்றாக இருக்கின்றீர்களாக என்று நலம் விசாரியுங்கள். நிறைய நல்லது நடக்க ஆரம்பித்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: