Followers

Monday, June 11, 2018

குருகிரகம் மறைவுஸ்தானம்


வணக்கம்!
          உங்களுக்கு தந்தை அல்லது தாத்தா மற்றும் உங்களின் முன்ஜென்மத்தில் ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு அல்லது கோவில்கள் சம்பந்தப்பட்ட விசயத்தில் பிரச்சினை கொடுத்து இருந்தால் உங்களின் ஜாதகத்தில் குரு கிரகம் மறைந்து அமர்ந்துவிடும். மறைவுஸ்தானத்தில் குரு அமர்ந்து விடுகின்றது.

குரு மறைவுஸ்தானத்தில் அமர்ந்துவிட்டால் அந்த ஜாதகர்களுக்கு இந்த ஜென்மத்தில் நிறைய தடங்கல் ஏற்பட்டாலும் அவர்களுக்கு திருமணம் என்ற ஒன்று நடைபெறாமல் போய்விடுகின்றது அல்லது திருமணம் முப்பதைந்து வயதிற்க்கு மேல் நடைபெறுகின்றது.

முப்பது வயதிற்க்கு மேல் திருமணம் நடைபெறாமல் இருந்தால் அவர்களுக்கு தான் தெரியும் அது எப்படிப்பட்ட கொடுமையான ஒரு வாழ்க்கை என்பது தெரியும். நம்ம சமுதாயத்தில் ஒரு ஆளை பார்த்தவுடன் கேட்கும் கேள்வியாக இருப்பது உங்களுக்கு கல்யாணம் முடிந்துவிட்டதா என்று இருக்கும். திருமணம் முடிந்துவிட்டால் அடுத்த கேள்வி உங்களுக்கு குழந்தை இருக்கின்றதா இது இரண்டும் முடிந்துவிட்டால் நீங்கள் இந்த பூமியில் சாதித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். 

பேசுவதற்க்கு ஒன்றும் தெரியவில்லை என்றாலும் இதனை தான் மக்கள் கேட்கும் கேள்வியாக இருக்கின்றது. ஆன்மீகத்திற்க்கு ஒரு எதிர்ப்பு காட்டினால் அவன் தொலைந்தான் என்று தான் அர்த்தம். ஆன்மீகத்திற்க்கு முடிந்தவரை உதவி செய்யுங்கள்.

குரு கிரகம் மறைந்துவிட்டால் உங்களுக்கு ஆன்மீகத்தின் மீது ஒரு சந்தேகம் வந்துவிடும். ஆன்மீகத்தின் மீது சந்தேகம் என்றால் ஆன்மீகம் பிடிக்காமல் வெறுப்பை கூட காட்டதொடங்கும். நம்முடைய ஜாதகத்தில் குரு மறைந்து கிடைக்கின்றது அதனால் தான் நமக்கு இப்படிப்பட்ட பிரச்சினை வருகின்றது என்று எண்ணிக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் நாம் நடக்கவேண்டும்.

நிறைய ஆன்மீகத்திற்க்கு என்று சலிப்பு பார்க்காமல் செய்யவேண்டும். கண்டிப்பாக ஆன்மீகவாதிகளுக்கும் நீங்கள் உதவி செய்யும்பொழுது மட்டுமே இந்த பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: