Followers

Friday, June 8, 2018

பெண்களுக்கான பதிவு


வணக்கம்!
          ஒரு பெண் திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்க்கு புகுந்தாலும் அவர் தன்னுடைய அப்பா வீட்டின் குலதெய்வத்தை மறக்ககூடாது. பிறந்த வீட்டின் குலதெய்வத்தை தொடர்ச்சியாக வணங்கிக்கொண்டே வரவேண்டும்.

புகுந்த வீட்டின் குலதெய்வத்தின் தெய்வத்தையும் வணங்கிக்கொண்டு பிறந்த வீட்டின் குலதெய்வத்தின் தெய்வத்தையும் வணங்கிக்கொண்டு வந்தால் அவரின் வாழ்க்கை சிறந்து விளங்கும். ஒரு பெண்ணிற்க்கு மட்டும் இரண்டு குலதெய்வம் என்று சொல்லுவார்கள். 

பல குடும்பங்களில் பெண் பிறந்த வீட்டின் குலதெய்வம் நல்ல உதவியாக இருக்கின்றது. குலதெய்வ வழிபாட்டில் பிறந்த பெண்ணிற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து குலதெய்வ பூஜையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்ய சொல்லுவார்கள்.

புகுந்த வீட்டில் பெண்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினையும் பிறந்தவீட்டின் குலதெய்வம் நிறைவற்றி வருகின்றது என்பது பலரின் வாழ்வில் நடந்து கொண்டு இருக்கின்றது. பிறந்த பெண்களுக்கு அதிக பிரச்சினை வருகின்றது என்றால் உடனே பிறந்த வீட்டின் குலதெய்வத்தின் வணங்கி வந்தால் அந்த பிரச்சினை தீரும்.

பிறந்த வீட்டின் குலதெய்வத்தை இதுவரை வணங்காமல் நீங்கள் இருந்தால் ஒரு முறை சென்று வணங்கி வாருங்கள். பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்க்கு பூஜையின் பொழுது காணிக்கை செலுத்தி வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: