Followers

Sunday, June 24, 2018

இராகு & கேது


வணக்கம்!
          ஒருவரின் குடும்பத்தில் உள்ள நபர்கள் அவர்களின் தலைவருக்கு ஒத்துழைப்பை அளிக்கமாட்டார்கள். அவர்கள் இஷ்டத்திற்க்கு சென்றுக்கொண்டு இருப்பார்கள். சொன்ன பேச்சை கேட்கமாட்டார்கள். 

குடும்ப தலைவருக்கு கட்டுப்பட்டு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒத்துழைத்தால் மட்டுமே அனைத்தும் நன்றாக செல்லும். எந்த காரியமும் சிக்கல் இல்லாமல் நடக்கும். தான்தோன்றிதனமாக நடந்தால் கண்டிப்பாக அந்த குடும்பம் சீரழிந்து போகும்.

பெரும்பாலான குடும்பங்கள் அழிவதற்க்கு இராகு கிரகம் காரணமாக இருக்கின்றது. இதனை பலமுறை நான் ஜாதககதம்பத்தில் சொல்லிருக்கிறேன். இதற்கு தீர்வும் அவ்வப்பொழுது சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

ராகு கேது நகர்வை புரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் தங்களின் வாழ்க்கையை நகர்த்த வேண்டும் என்று சொல்லுவார்கள். ஏன் என்றால் இந்த கிரகங்கள் வாழ்க்கையை அப்படி புரட்டிபோடும். வாழ்க்கையை சீரழிக்க இந்த கிரகங்கள் வழிவகுக்கும்.

உங்களால் முடிந்தவரை உங்களுக்கு தெரிந்த இராகு கேது பரிகாரங்களை செய்யுங்கள். அதனை மீறியும் இராகு கேது பிரச்சினை செய்கின்றது என்பவர்கள் நம்மால் நடத்தப்படும் நவஅம்மன்(சண்டி) யாகத்தில் தங்களின் காணிக்கை செலுத்தி பங்களிப்பை அளிக்கலாம்.

சென்னையில் இருக்கிறேன். சென்னை நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: