Followers

Thursday, June 7, 2018

நைவேத்தியம்


 ணக்கம்!
         கடவுளுக்கு பயன்படுத்தும் நைவேத்தியத்தில் அதிக கவனம் செலுத்தி தயார் செய்யவேண்டும். கடவுள் படைக்கும் நைவேத்தியம் என்பது மிகவும் சுத்தமாக தயார் செய்யவேண்டும். நைவேத்தியம் தயார் செய்யும் நபர் முதலில் நன்றாக குளித்துவிட்டு அதன்பிறகு சமைக்க ஆரம்பிக்கவேண்டும்.

நைவேத்தியம் தயார் செய்யும் வீட்டையும் சுத்தமாக தயார் செய்த பிறகு தான் சமைக்க ஆரம்பிக்கவேண்டும். கடவுளுக்கு என்று நாம் படைக்கும் உணவு என்பது மிகவும் புனிதமானது அதனை நாம் சுத்தமாக தயார் செய்யும்பொழுது கடவுள் நமக்கு உடனே பலனை கொடுப்பார்.

ஒரு சில நேரத்தில் சமைக்கும் பொழுது வாயில் மற்றும் மூக்கில் துணியை அணிந்துக்கொண்டு அதனை நுகராமல் தயார் செய்வார்கள். இப்படி செய்யமுடியவில்லை என்றாலும் நன்றாக குளித்துவிட்டு சுத்தமாக தயார் செய்யுங்கள்.

நாம் என்ன தான் மந்திரங்களை சொன்னாலும் அது எல்லாம் கூட ஒரு சில நேரத்தில் தவறாக பயன்படும் விதத்தில் நடந்துவிடும் ஆனால் நாம் படைக்கும் நைவேத்தியத்தை கண்டிப்பாக இறைவன் ஏற்பார்.

எந்த தெய்வத்திற்க்கு எப்படிப்பட்ட நைவேத்தியத்தை படைக்கிறார்கள் என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல நீங்கள் தயார் செய்து படைத்தால் நன்றாக உங்களுக்கு பலன் கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: