Followers

Thursday, June 7, 2018

கர்மாவை எளிதாக எப்படி அறிவது?


வணக்கம்!
          ஒரு நண்பர் கேள்வி கேட்டார். கர்மா என்பதை சாதாரணநபர்கள் உடனே உணர்ந்துக்கொள்வது எப்படி என்று கேட்டார்.

உலக முழுவதும் உங்களுக்கு பிரச்சினை என்று வந்தாலே அது கர்மாவை தான் காட்டுவார்கள். இவர் எளிதாக புரிந்துக்கொள்வது எப்படி என்று கேட்டு இருக்கின்றார். ஒரு சின்ன பிரச்சினை வந்தாலே அது கர்மா என்று தான் சொல்லுவார்கள். உண்மையாக அப்படி இல்லை. 

கர்மாவை எளிதாக புரிந்துக்கொள்வதற்க்கு ஒரு வழியை சொல்லுகிறேன். ஆண்களாக இருந்தால் அவர்களின் மனைவியின் நகையை வாங்கி அடகு வைத்து விடுங்கள் அல்லது விற்றுவிடுங்கள். உங்களின் மனைவியின் வீட்டில் போட்டு நகையாக இருந்தால் நல்லது.

கொஞ்சநாள்கள் அந்த நகையை திருப்பிக்கொடுக்காமல் இருந்தால் போதும். கர்மா என்றால் என்ன என்று உங்களுக்கு புரியும். நீங்கள் நகையை அடகு வைக்கிறேன் என்று நீங்கள் உங்களின் மனைவியிடம் கேட்கும்பொழுதே கர்மா என்றால் என்ன என்பது புரியும்.

ஒவ்வொருநாளும் எப்படிப்பட்ட பிரச்சினை எல்லாம் வரும் என்பது அந்த சிவனுக்கு கூட தெரியாது. நீங்கள் நினைக்காதா பிரச்சினை எலலாம் வரும். நீங்கள் இந்த நகையை திருப்பிக்கொடுக்கும்பொழுது தான் கர்மா உங்களை விட்டுவிலகும். கர்மாவைப்பற்றி தெரிந்துக்கொள்ள இது ஒரு எளிமையான வழி.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: