Followers

Monday, June 25, 2018

புண்ணியம்


வணக்கம்!
          நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் நமக்கு ஒவ்வொரு அனுபவத்தை நமக்கு தருவார்கள். அனுபவங்களை வைத்து சோதிடவிதிகளையும் சேர்த்து உங்களுக்கு கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். 

பல வருடங்கள் நான் சோதிட பார்த்ததில் ஒருவர் பிரச்சினையில் சிக்குகிறார் என்றால் அவர்க்கு பெரும்பான்மையான கிரகங்கள் அவர்க்கு எதிராக செயல்பட ஆரம்பித்துவிடுகின்றது. அந்த நேரத்தில் ஒருவரை காப்பாற்றுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுவிடுகின்றது.

நாம் காப்பாற்றுவதில் அவர் நிறைய புண்ணியங்கள் செய்து இருந்தால் மட்டுமே அவரை நம்மால் காப்பாற்றமுடியும். புண்ணியம் செய்திருந்தால் அவர்க்கு ஏன் இப்படி நடக்கிறது என்று நினைக்கலாம். என்ன செய்வது ஒரு வார்த்தைக்கு இப்படி சொல்லிவிடலாம். உண்மையும் அவர்கள் ஏதாவது புண்ணியம் செய்தால் காப்பாற்றலாம்.

நம்ம ஆட்களிடம் ஒரு பழக்கம் இருக்கும். நன்றாக இருக்கும்பொழுது அவர்கள் அடுத்தவர்களுக்கு அறிவுரை எல்லாம் சொல்லுவார்கள். புண்ணியம் என்பதை மட்டும் செய்யமாட்டார்கள். நாம் கேட்டால் நான் நிறைய புண்ணியம் செய்து இருக்கிறேன் என்பார்கள்.

உங்களின் புண்ணியத்தை அதிகரிக்க நம்மால் முடிந்த ஒன்றை செய்யலாம். இது உங்களின் விருப்பம் போல செய்வதால் இதனை அனைவரும் செய்யமுடியும். நம்மால் நடத்தப்படுகின்ற நவஅம்மன்(சண்டி) யாகத்தில் தங்களின் காணிக்கை செலுத்திவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: