Followers

Monday, June 18, 2018

மாரகதசா பரிகாரம்


வணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் ஒருவர்க்கு மாரகம் தரக்கூடிய ஒரு தசா நடந்தால் அவர் அந்த நேரத்தில் தன்னுடைய வேலைபளுவை எல்லாம் குறைத்துக்கொண்டு அவரின் மாரகதசாவிற்க்கு உள்ள பரிகாரம் மற்றும் வழிபாடுகளை மேற்க்கொண்டால் போதும் கொஞ்சம் மாரகத்தை தள்ளிபோடலாம்.

ஒரு சிலருக்கு இளம்வயதில் மாரக தசா வரலாம். அந்த நேரத்தில் வேலையை பார்த்துக்கொண்டு தான் இருக்கமுடியும். வேலைக்கும் செல்லவேண்டும் இந்த தசாவிற்க்கு பரிகாரமும் செய்யவேண்டும். பொதுவாக மாரக தசா வந்தால் அவர்களுக்கு மிருத்துஞ்ச மந்திர ஜெபம் செய்ய சொல்லுவார்கள்.

வேலைக்கு போகும் நபர்களுக்கு இந்த தசா நடந்தால் தினமும் பூஜையில் இந்த மிருத்துஞ்ச மந்திர ஜெபத்தை ஒரு முறையாவது சொல்லிக்கொண்டு பூஜையை முடித்துவிட்டு வேலைக்கு செல்லலாம்.

உங்களுக்கு விடுமுறை நாட்களில் இந்த மந்திர ஜெபத்தை அதிகப்படுத்தலாம். அதாவது பல முறை இந்த மந்திரஜெபத்தை செய்துவிட்டு பூஜையை முடிக்கலாம். ஒரு முறை திருகடையூர் சென்று சாமி தரிசனம் செய்து வந்தால் உங்களுக்கு வரும் மாரக தசாவின் பாதிப்பு குறைந்துவிடும்.

ஒருவருக்கு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும்பொழுது அவர்களை காப்பாற்றும் முயற்சியில் என்னிடம் சொல்லுவார்கள். நானும் பலரை இந்த தருவாயிலில் இருந்து மீட்டு வந்து இருக்கிறேன். தற்பொழுது இந்த சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. இது அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்களுக்கு மட்டும் இது செய்யப்படுகின்றது.

நீங்கள் இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு மிருத்துஞ்ச மந்திரத்தை அவர் இருக்கும் இடத்தில் செல்போனில் வேண்டுமானால் ஒலிக்கவிடலாம். இது நல்ல முன்னேற்றத்தை தரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: