Followers

Tuesday, June 26, 2018

விளக்கம்


வணக்கம்!
          இன்றைய காலத்தில் நிறைய பிரச்சினைக்கு மனிதர்கள் மட்டும் அல்லாமல் ஆன்மீகவாதிகளும் காரணமாக இருக்கின்றனர். ஆன்மீகவாதிகள் எப்படி இருக்கவேண்டும் என்பதில் இருந்து தவறி அவர்கள் எல்லையை மீறி செயல்படும்பொழுது தான் சாதாரணமானவர்களுக்கு நிறைய பிரச்சினை வந்துவிடுகின்றது.

நம்மிடம் வருபவர்களுக்கு அவர்களின் நிலையில் இருந்து பிரச்சினையை அலசும்பொழுது மட்டுமே அவர்களுக்குள்ள பிரச்சினை என்ன என்பது நமக்கு புரியும். நாம் சொல்லும் ஆலோசனை அவர்களால் எளிதில் ஏற்றுக்கொண்டு அதன் வழியில் நடக்க ஆரம்பிப்பார்கள்.

நம்மிடம் புதியதாக வரும் வாடிக்கையாளர்கள் பல ஆன்மீகவாதிகளை சந்தித்து இருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு சரியான வழியை கொடுக்கவே இல்லை என்று அவர்கள் பேசும் வார்த்தையில் இருந்து தெரிந்துக்கொள்ளமுடிகிறது.

நம்மை தேடி வருபவர்களிடம் நாம் பெரிய ஆள் என்பதை காட்டிக்கொள்ளவே கூடாது. சாதாரணமானவர்கள் போல தான் இருக்கவேண்டும். அவர்களின் பிரச்சினை நமக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை நம்மால் உணரமுடிந்தால் வரும் நபர்களுக்கு நம்முடைய ஆத்மா முழுமையாக உணர்ந்து தீர்வு வழங்கும். இதனை நான் செய்துக்கொண்டு இருக்கிறேன். எதிர்காலத்தில் சிறப்பாக செய்யவேண்டும் என்று அம்மனிடம் வேண்டிக்கொண்டு இருக்கிறேன்.


நவஅம்மன்(சண்டி) யாகத்தை தேதி சொல்லாமல் ஆரம்பித்துவிட்டீர்களே என்று பலர் தெரிவித்தனர். அம்மனிடம் இதனை முன்கூட்டியே தெரிவித்து அனுமதிக்காக காத்திருந்தேன். அது இன்றைய காலையில் நமக்கு அனுமதி தந்தது உடனே ஆரம்பித்துவிட்டேன். நவஅம்மன்(சண்டி) யாகத்தில் கலந்துக்கொள்பவர்கள் அனுப்பி வையுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: