Followers

Thursday, June 14, 2018

மகரராசி


வணக்கம்!
          மகரராசியினர்க்கு இது கஷ்டமான ஒரு நேரம் என்று சொல்லலாம். மகரராசியினர்க்கு ஏழரை ஆரம்பித்த காலத்திலும் மற்றும் ராகு கேது பெயர்ச்சியும் அந்தளவுக்கு சரியில்லை என்பதால் தற்பொழுது ஒரு கடினமான ஒரு நேரம் என்று சொல்லலாம்.

மகரராசியினர்களுக்கு இராசியில் கேது பகவான் அமர்ந்து இருப்பதால் உங்களுக்கு அதிகமான நோய்வாய்ப்படுதல் நடக்கும். உடல்நிலையில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். முக்கியமான வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கும்.

கேது பகவானுக்கு கொள்ளு நைவேத்தியம் படைக்கலாம். கேது பகவானுக்கு படைப்பதோடு இல்லாமல் வாரத்தில் மூன்று நாட்கள் நீங்களும் கொள்ளு உண்ணலாம். கொள்ளு ஏதோ ஒரு உணவாக எடுத்துக்கொள்வது நல்லதாக இருக்கும்.

பிப்ரவரி 2019 வரை கேது பகவானுக்காக நீங்கள் கொள்ளு உணவாக எடுத்துக்கொள்ளலாம். கண்ட கண்ட இடத்தில் சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். முடிந்தவரை வீட்டில் உணவை சாப்பிடுங்கள். வெளியில் சென்றால் பழத்தை உணவாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

வாரம் வாரம் தொடர்ச்சியாக சனிக்கிழமை அன்று சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். குறைந்தபட்சம் ஒன்பது வாரமாவது தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். ஏழரைச்சனியும் கொஞ்சம் தொந்தரவை கொடுத்துக்கொண்டு இருக்கின்றது. 

உணவில் கட்டுபாட்டோடு இருந்தால் பெரிய பிரச்சினையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் இல்லை என்றால் மருத்துவமனையில் லட்சக்கணக்கில் செலவு செய்ய வைத்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: