Followers

Wednesday, June 13, 2018

ரிஷபராசி


ணக்கம்!
          பொதுவாக ஒவ்வொரு ராசியினர்க்கும் உள்ள பொதுவான பிரச்சினையை மட்டும் சொல்லுகிறேன். இது கோச்சாரபலனை அடிப்படையாக வைத்து சொல்லுகிறேன். இது நடக்கலாம் அல்லது நடக்காமாலும் இருக்கலாம். அவர் அவர்களின் சொந்த ஜாதகத்தை பார்த்து தான் உண்மையான விபரம் சொல்லலாம்.

ரிஷபராசியினர்க்கு தற்பொழுது விபத்துக்கள் ஏற்படுவதற்க்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது. ஏற்கனவே விபத்து ஏற்பட்டு இருக்கலாம் அல்லது இனிமேலும் விபத்து ஏற்படலாம். உங்களின் வீட்டில் உள்ள படியில் இருந்துகூட கீழே விழுவதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது.

உடல்நிலையில் வாயுக்கள் தொந்தரவு அதிகமாக இருக்கும். திடீர் நெஞ்சுவலி ஏற்படுவதற்க்கு வாய்ப்பு உண்டு. அது நெஞ்சுவலி இதயத்தால் வருவது இல்லை வாயுவால் வரும். வாயுவை போக்க சித்தமருத்துவத்தில் பரிந்துரைக்கும் விசயங்களை எடுத்துக்கொள்ளலாம். 

நீங்கள் திருமணம் செய்து இருந்தால் கணவன் மனைவிக்குள் பிரச்சினை ஏற்படும். கணவன் மனைவிக்குள் பிரச்சினை இல்லை என்றால் உங்களின் வீட்டில் உள்ளவர்கள் உங்களுக்கு பிரச்சினை கொடுப்பார்கள்.

பெரும்பாலான திருமண தம்பதிகள் தற்பொழுது பிரிந்து தான் இருப்பீர்கள். இது நிரந்தரம் என்று நினைக்கவேண்டாம். கோள்களின் விளையாட்டால் அப்படி நடந்து இருக்கின்றது. விரைவில் ஒன்று சேரலாம். தற்பொழுது பிரிந்து இருப்பது நல்லது தான்.

ஒரு சந்நியாச வாழ்வு தற்பொழுது நீங்கள் வாழவேண்டும் என்பதால் அதன் அடிப்படையில் உங்களுக்கு நடந்துக்கொண்டு இருக்கும். அனைத்திலும் பொறுமையாக இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல காலம் வரும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்லமுடியும்.

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றுவது நல்லது. சனிக்கிழமை அன்று விரதம் இருப்பதும் உங்களுக்கு நன்மை பயக்கும். உணவில் எச்சரிக்கையோடு இருப்பதும் நல்லது.

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: