Followers

Sunday, September 1, 2019

விநாயகர் சதுர்த்தி


வணக்கம்!
          எனக்கு தெரிந்தவரை இந்த விநாயகர் சதுர்த்தி எல்லாம் அந்தளவுக்கு பெரியளவில் இல்லை. எனக்கு தெரிந்த ஆன்மீகவாதிகள் மட்டும் இன்று விநாயகர் சதுர்த்தி என்று சொல்லுவார்கள். நான் சிறுவனாக இருந்த நேரத்தில் எல்லாம் இப்படி சொல்லி தான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

இன்றைக்கு விநாயகர் சதுர்த்தி பெரியளவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. முடிந்தவரை இந்த பண்டிகை வைத்து நடைபெறும் வியாபாரம் என்பது பெரியளவில் நடக்கின்றது. தெருவில் செல்லமுடியாத நிலையில் மக்கள் கூட்டம் இருக்கின்றது.

விநாயகர் சதுர்த்தி மீடியா வழியாக தெரிந்தாலும் இதனை கொண்டாடும் மக்கள் மனநிலை உயர்ந்தால் சரி. அவர்களின் மூலாதாரம் நன்றாக திறந்து ஒவ்வொருவரும் பெரியளவில் உயர்ந்தால் நல்லது. மூலாதாரத்தை இயக்கி உங்களுக்கு நல்ல வாழ்க்கை அதுவும் எதிலும் தடை இல்லாமல் வெற்றிப்பெற்றால் நல்லது. 

விநாயகர் சதுர்த்தி அன்று பிறமதத்தில் உள்ளவர்களின் மனம் புண்படும் விதத்தில் நடந்துக்கொள்ளாமல் அமைதியாக கொண்டினால் மிகவும் நல்லது. நாம் வருடந்தோறும் இதனை சொல்லுவது உண்டு. இதனை கடைபிடித்தால் நல்லது.

விநாயகர் சதுர்த்தி அன்று நீங்கள் நான் செய்யும் காரியத்தில் தடை இல்லாமல் வெற்றி பெறவேண்டும். எடுக்கும் நல்ல காரியம் அனைத்தும் நல்லமுறையில் செயல்படவேண்டும் என்று பிராத்தனை செய்யுங்கள். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: