Followers

Friday, September 27, 2019

முன்னோர்களின் புகைப்படங்கள்


வணக்கம்!
          நிறைய பேர்கள் வீட்டில் அவர் அவர்களின் முன்னோர்களின் படங்களை வைத்து வணங்குவார்கள். ஒரு சில வீடுகளில் இது அதிகமாகவே வைத்துவிடுவார்கள். இதனை வைக்கவேண்டாம் என்று சொல்லவில்லை குறைவாக வைத்துக்கொள்ளலாம்.

அமாவாசை வருகின்றது முன்னோர்களுக்கு செய்யவேண்டிய கடமையை செய்யுங்கள். முன்னோர்களின் படங்களை வைத்து வணங்கவேண்டியதில்லை அவர்களுக்கு தேவையான சடங்குகளை மட்டும் செய்தால் போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

முன்னோர்களின் படங்களை வைப்பதிலும் நம்ம ஆட்களோடு திறமையான மூளையை பயன்படுத்துவார்கள். அவர்களின் முன்னோர்களில் யார் அதிகமாக சம்பாதித்தார்களோ அவர்களின் புகைப்படங்களை அதிகமாக வைத்திருப்பார்கள்.

ஒரு சில வீட்டில் சொத்தை அதிகமாக சேர்த்து கொடுத்துவிட்டு சென்றவர்களின் புகைப்படங்களை வைத்திருப்பார்கள். இது அவர்கள் பயன்பெற்றதால் வைத்திருக்கலாம். முன்னோர்களில் பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் வையுங்கள் மற்றும் வழிபாட்டை செய்யுங்கள்.

உங்களில் முன்னோர்களுக்கு அனைவருக்கும் ஒரே மாதிரியான சடங்குகளை செய்து அவர்களின் ஆசியை பெறுங்கள். அனைவரின் ஆசியையும் பெற்று நல்ல முறையில் வாழ்வதற்க்கு புரட்டாசி அமாவாசையை நன்றாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: