Followers

Monday, September 2, 2019

அம்மன் கோவில் கட்டும்பணி தாெடங்கியது


வணக்கம்!
         இன்று அம்மன் கோவில் கட்டும் பணி ஆரம்பித்துவிட்டோம். விநாயகர் சதுர்த்தி அன்று கோவில் கட்டும் பணி சிறப்பாக ஆரம்பித்துவிட்டோம். கோவிலில் நடைபெறும் பணிகளை வாட்ஸ்அப்பில் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறோம். 

அம்மன் கோவில் கட்டும்பணியில் தங்களை இணைத்துக்கொண்ட அனைத்து நண்பர்களும் அம்மனின் அருள் கிடைக்கும். இந்த பணியை ஆரம்பிக்க நிறைய நண்பர்களின் ஒத்துழைப்பை அளித்த காரணத்தால் மட்டுமே இது சாத்தியப்பட்டது.

ஒவ்வொரு நாளும் நிறைய உழைப்பை இதற்கு என்று போட்டார்கள். இதனை நான் நன்கு அறிந்தேன். நமது நண்பர்களின் உழைப்பை கண்டு நான் வியந்து போய் இருந்தேன். ஒவ்வொருவரின் நண்பர்களின் வட்டாரத்தில் சொல்லி இதனை ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

அம்மன் கோவில்கட்டும் பணிக்கு நிறைய நிதி உதவி தேவைப்படுகின்றது. உங்களால் முடிந்தவரை முயற்சி செய்து இதனை தயார் செய்யுங்கள். இந்த உதவியால் உங்களுக்கு நல்லது நிறைய நடக்கும்.

அம்மன் கோவில் கட்டும் பணிக்கு உடனே நிதியுதவியை செய்யுங்கள்.

விரைவில் அம்மன் பூஜை நடைபெறும் அதற்கு காணிக்கை செலுத்துபவர்களும் செலுத்தி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: