Followers

Thursday, September 19, 2019

கெட்ட நேரத்தில் கெட்ட கனவு


வணக்கம்!
          ஒருவருக்கு கெடுதல் தசா நடைபெறுகின்றது என்று வைத்துக்கொள்வோம். அவர்க்கு நடப்பது அனைத்தும் கெடுதலாகவே இருந்தாலும் அவர் காணும் கனவும்  பயங்கரமாகவே இருக்கும். இரவிலும் தூக்கமுடியாமல் பயமுறுத்திக்கொள்ளும்.

கெடுதல் தசா காலத்தில் தூக்கம் என்பது வராது அப்படியே வந்தாலும் கனவில் கெட்ட கெட்ட கனவுகளாகவே வரும்.  கனவிற்க்கும் நமது வாழ்விற்க்கும் நிறைய சம்பந்தம் இருக்கின்றது. ஒரு சிலருக்கு கனவில் காணும் அனைத்தும் நடக்கும்.

கெடுதல் தசா காலத்தில் நிறைய கெடுதலை கொடுப்பது போலவே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு வரும் இது அவர்க்கு நடப்பது குறைவாகவே இருந்தாலும் அவர் நிம்மதி இன்றி தவிப்பது போலவே இருக்க செய்ய வைத்துவிடுகின்றது.

எனக்கு இராகு தசா நடக்கும் காலத்தில் நடந்த கனவுகள் பெரும்பாலும் எனது வாழ்க்கையில் அப்படியே நடந்தும் இருந்தது. இராகு தசாவில் பெரும்பாலும் நிறைய கெடுதல் எனக்கு நடந்தது அது நான் கண்ட கனவு போலவே இருந்தது.

கனவு தானே என்று இருந்துவிடாமல் அதில் நடக்கும் விசயம் என்ன என்பதையும் கொஞ்சம் யோசித்து பார்த்தால் உங்களுக்கு நிறைய விசயங்கள் உங்களுக்கு நடக்கும். அதனை தவிர்க்க நீங்கள் தியானம் செய்யுங்கள். நிறைய கோவில்களுக்கு சென்று வாருங்கள்.

நவராத்திரி அம்மன் யாகம் செய்ய வேண்டுபவர்கள் உடனே தகவலை தெரிவியுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: