Followers

Wednesday, September 25, 2019

பூர்வபுண்ணியமும் தீயகிரகமும்


வணக்கம்!
          எல்லோருக்கும் பூர்வபுண்ணியம் நன்றாக இருக்கும்பொழுது தான் அவர்களுக்கு வாரிசுகள் உருவாகும். வாரிசுகள் உருவாகி அது நன்றாக  வளரவேண்டும் என்றாலும் அதற்கும் பூர்வபுண்ணியம் நன்றாக இருக்கவேண்டும்.

பூர்வபுண்ணியத்தால் குழந்தை கிடைத்தாலும் அவர்களின் வளர்புமுறையிலும் குழந்தைகளின் எதிர்காலம் இருக்கின்றது. அதோடு அவர்களின் பூர்வபுண்ணியமும் நன்றாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் நல்ல நிலைக்கு வருவார்கள்.

பூர்வபுண்ணியத்தில் தீயகிரகங்கள் இருந்தால் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்பார்கள் அப்படி அல்ல. குழந்தைகள் இருக்கும் அவர்களின் வளர்ச்சி என்பது கொஞ்சம் சரியில்லாமல் இருக்கும்.

பூர்வபுண்ணியத்தில் தீயகிரகங்கள் குழந்தையை கொடுப்பதில் தாமதப்படுத்தினால் அவர்களுக்கு பிறக்கும் வாரிசுகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஏன் என்றால் முன்கூட்டியே கஷ்டத்தை கொடுத்து குழந்தையை கொடுத்த காரணத்தால் வளர்ச்சி இருக்கும்.

குழந்தையை உடனே கொடுத்தால் அந்த குழந்தையின் வளர்ச்சியில் அது விளையாடபோகின்றது என்று அர்த்தத்தில் அதனை எடுத்துக்கொள்ளவேண்டும்.  எப்படி இருந்தாலும் நீங்கள் அதிக கவனத்தை இதில் போட்டால் ஒரளவு நல்ல வளர்ச்சியை காணமுடியும்.

நவராத்திரி விழா ஆரம்பிக்க போகின்றதால் நவராத்திரி அம்மன் யாகத்தை செய்ய விருப்பம் இருப்பவர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: