Followers

Tuesday, September 24, 2019

கோச்சாரபலன்


வணக்கம்!
          கோச்சாரபலன்களில் நாம் சனியைப்பற்றி பார்த்து பயப்படுவது உண்டு அதன்பிறகு இராகு கேது மற்றும் குரு இது போன்ற கிரகத்தை வைத்து கோச்சாரபலன்களில் பயப்படுவது உண்டு. ஏழரைச்சனி மற்றும் அஷ்டமசனி என்று பெயரை வைத்து பயந்துக்கொண்டு இருப்போம்.

இவர்களை எல்லாம் விட தினமும் ஒருவரை படுத்தி எடுக்கும் சந்திரனின் பலன் மிகப்பெரிய பயமாகவே அனைவருக்கும் இருக்கும். இதனை நாம் அந்தளவுக்கு எடுத்துக்கொள்வதில்லை. பெரும்பாலும் சந்திராஷ்டத்தை வைத்து நாம் பயப்படுவது உண்டு.

தினமும் நீங்கள் சந்திரன் செல்லுவதை வைத்து பார்த்தாலே முக்கால்வாசி அது நமக்கு ஆப்பு அடிப்பது போலவே செயல்பட்டுக்கொண்டு இருப்போம். நாம் மெதுவாக செல்லும் கிரகத்தை பார்த்து பயப்படுவோம் உதாரணத்திற்க்கு சனிக்கிரகத்தை.

சந்திரனின் சுழற்சி தான் பெரும்பாலும் மனிதனுக்கு பெரிய சிக்கலை உருவாக்கி கொடுத்துவிடுகின்றது. இதனை நன்கு கவனித்து பார்த்தால் உங்களுக்கு புலப்படும். பெரிய கிரகத்தை பார்த்து கோச்சாரபலன்களில் பயப்படவேண்டாம். சந்திரனை பார்த்து பயப்படுங்கள்.

சந்திரன் மனதிற்க்கு காரணம் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள். மனதை போட்டு பாடாய்படுத்தி மனிதனை காலி செய்துவிடுகின்றது. சந்திரனை வைத்து தினமும் பொதுபலன்களை சொன்னாலும் உங்களுக்கு அது எப்படி வேலை செய்கின்றது என்று பாருங்கள். அது வைத்து என்ன என்ன வேலை செய்யலாம் என்பதை தீர்மானியுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: