Followers

Thursday, September 12, 2019

அம்மன் கோவில்


ணக்கம்!
          வழக்கமாக இருக்கும் கோவிலை விட நமது அம்மன் கோவில் அடி ஆழம் அதிகமாக தோண்டி எடுக்கப்பட்டு அதன்பிறகு பேஷ் போடப்பட்டு வருகின்றது. கோவில் இருக்கும்பகுதி வயல் மற்றும் குளம் இருப்பதால் அதிகளவில் தண்ணீர் இருக்கும் பகுதியால் அதிகமான ஆழத்தில் இருந்து எழுப்ப வேண்டியிருக்கின்றது.

மரங்களின் வேர்களும் கோவிலை தாக்கி பிற்காலத்தில் சேதம் விளைவிக்க கூடாது என்பதாலும் இதனை கணக்கில் கொண்டு கட்டப்பட்டு வருகின்றது. வேலையும் வேகமாக தான் செய்கின்றனர். இந்த காரணத்தால் தான் மேல் வருவதற்க்கு நாள்கள் எடுகின்றன.

வீடுகள் போல் இல்லாமல் கோவில்கள் கட்டுவதற்க்கு வித்தியாசமாக தான் வேலை செய்கின்றனர். கோவிலுக்கு என்று நிறைய விதிகளை வைத்து அதன்படி செய்கின்றனர். இதனை ஏன் சொல்லுகின்றேன் என்றால் நமது நேரடி பார்வையில் கோவில் கட்டுவதால் நேரடி அனுபவம் ஏற்படுகின்றது. எதிர்காலத்தில் நீங்கள் கோவில் கட்டும்பொழுது என்னுடைய அனுபவம் உங்களுக்கு பயன்படலாம்.

நமது அம்மன் கோவிலுக்கு நமது நண்பர்களால் நிறைய உதவி கிடைத்துக்கொண்டே இருக்கின்றது. இந்த உதவிகள் தான் நமது அம்மன் கோவிலை சிறப்பாக செய்வதற்க்கு உதவியாக இருக்கின்றது. அவர் அவர்களும் அவர்களின் நண்பர்களின் வட்டத்தில் இருந்தும் உதவியை செய்கின்றனர். உங்களின் உதவி தொடர்ச்சியாக இருக்கட்டும். இந்த உதவியை தான் நான் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: