Followers

Friday, September 20, 2019

நல்ல சக்தி


வணக்கம்!
          அம்மனை கும்பிடுபவர்கள் நவராத்திரி தினத்தை தான் அதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டும். நவராத்திரி காலத்தில் நடைபெறும் பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் கவனத்தை எடுத்துக்கொண்டு செயல்பட்டால் போதும் அம்மனின் முழுசக்தியும் உங்களுக்கு கிடைக்கும்.

பணக்காரன் பணக்காரனோடு சேருவான். ஏழை ஏழையோடு சேருவான். பணக்காரனின் எண்ணம் எல்லாம் ஒரே மாதிரியாக பெரும்பாலும் வளர்ச்சியை நோக்கியே செல்லும். ஏழைகளின் எண்ணம் எல்லாம் பிரச்சினை பிரச்சினை என்றே இருக்கும்.

பாசிடிவ் எண்ணத்தை கொண்டவர்களுக்கு வளர்ச்சி என்பது இருந்துக்கொண்டே இருக்கும். பாசிடிவ் எண்ணத்திலேயே பல பணக்காரர்கள் இருக்கின்றனர். இதனை அவர்கள் வளர்த்துக்கொள்கின்றனர்.

நெகடிவ் எண்ணத்திலேயே இருந்துக்கொண்டு ஏழைகள் தானும் கெட்டு தன்னோடு சேர்ந்தவர்களையும் கெடுத்துவிடுகின்றனர். நீங்கள் ஏழைகளாக இருந்தாலும் சரி நீங்கள் தொடர்பு வைத்திருப்பது பெரும்பாலும் பணக்காரர்களாக இருந்தால் நீங்களாகவே நீங்கள் முன்னேற்றத்தை காண்பீர்கள்.

பணக்காரர்கள் ஏன் ஏழைகளை ஒதுக்குகின்றனர் என்றால் அவர்களிடம் உதவி கேட்டுவிடுவார்கள் என்ற பயத்தால் தான் ஒதுக்குவார்கள். அவர்களின் நல்ல சக்தியை மட்டுமே நீங்கள் உறிஞ்சினால் போதும் என்று நீங்கள் பழக ஆரம்பித்தால் விரைவில் நீங்களும் பணக்காரர்களாக மாறிவிடுவீர்கள்.

உங்களின் ஜாதகத்தில் எவ்வளவு பெரிய தோஷம் இருந்தாலும் சரி நீங்கள் அதனைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. நீங்கள் பணக்காரர்களோடு தொடர்பில் மட்டும் இருங்கள் அது போதுமானது. உங்களின் தோஷத்தை மீறி நீங்கள் வெற்றிப்பெற்றுவிடுவீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: