Followers

Wednesday, September 4, 2019

கர்மாவும் கோவிலும்


வணக்கம்!
          பல நண்பர்கள் நீங்கள் தற்சமயம் நிறைய கஷ்டப்படுகின்றீர்களா என்று கேள்வி எழுப்பினார்கள். கோவில் கட்டும்பணியில் நிறைய கஷ்டங்களை எதிர்நோக்குகின்றீர்களா என்று கேட்டனர்.

கோவில் கட்டும்பணி என்பது கர்மா தொடர்புடைய வேலையை அதிகமாக கொண்ட ஒன்று. நமது கர்மாவை துடைத்து எடுக்கும் சக்தி வாய்ந்த ஒன்றாகவே இதனை கருதவேண்டும். நிறைய கஷ்டங்கள் என்பது இல்லை. நிறைய கஷ்டங்களை நாம் பார்த்து இருக்கின்றோம் இதனை கொஞ்சமாகவே நான் கருதுகிறேன்.

பெரும்பாலும் இது ஒரு பொதுவான ஒரு காரியம் என்பதால் இதில் தவறு இல்லாமல் அதே நேரத்தில் கொஞ்சம் அதிக சக்தி போட்டு செய்யவேண்டும் என்பதால் இதனை அக்கறைபோட்டு செய்கிறேன். மற்றபடி எந்தவித கஷ்டமும் இல்லை என்றே சொல்லலாம்.

இயற்கையாகவே நான் பொறுமையாகவும் அதே நேரத்தில் அமைதியாகவும் இருப்பவன் என்பதால் இதனை எளிமையாகவே கையாள்கிறேன். கூடுமானவரை இப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்த வாய்ப்பு வருகின்றது.

என்னுடைய கணிப்பில் உங்களுக்கும் என்னுடைய எண்ணம்போலவே தான் இருக்கும். ஒரே மாதிரியான எண்ணங்களை கொண்டவர்களால் தான் இத்தனை வேலையையும் செய்யமுடிகின்றது. நம்மால் தான் நிறைய சாதிக்கமுடியும் என்றும் தோன்றுகிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: