Followers

Friday, September 13, 2019

தெய்வநிலை


வணக்கம்!
          நிறைய பேர்கள் நான் நல்ல ஆன்மீகவாதியாக இருக்கிறேன். நான் நிறைய கோவிலுக்கு சென்று வருகிறேன். நிறைய பூஜைகளை செய்துக்கொண்டு இருக்கிறேன் ஆனால் எனக்கு ஒன்றும் நடப்பதில்லை. என்னுடைய காரியம் எதுவும் வெற்றி பெறுவதில்லை என்று சொல்லுவார்கள். பெரும்பாலானவர்கள் இப்படிப்பட்ட வார்த்தையும் உங்களிடம் வைத்திருக்கலாம்.

இவர்களை நன்றாக கவனித்து பார்த்தால் ஏதோ ஒரு விதத்தில் சரியில்லாமல் இருப்பார்கள். இவர்களின் கர்மா என்று சொல்லுவதை விட இவர்களின் நடத்தை அப்படிப்பட்ட ஒன்றாக இருக்கும். இவர்கள் உங்களிடம் ஏதோ ஒன்றை கேட்டு அதனை நீங்கள் செய்யாமல் இருந்தால் அவர்கள் உடனே அவர்களின் எதிர்மறை குணத்தை காட்டுவார்கள்.

எதிர்மறை குணத்தை காட்டுவது தவறு என்று சொல்லவில்லை ஆனால் ஆன்மீகம் என்பது எதனையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு பக்குவநிலை. இதனை இப்படி சொல்லலாம் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நான் உன்னை பற்றிக்கொண்டதை விடமாட்டேன் என்ற நிலை என்று சொல்லலாம்.

மனிதனை ஒரே மாதிரியாக பார்க்கும் ஒரு பக்குவப்பட்ட நிலையாக இருக்கவேண்டும். ஒரு தெய்வத்திடம் நாம் இப்படிப்பட்ட நிலையில் இருக்கும்பொழுது தான் நம்மை நாடி இறை அருள் கிடைக்கும். இது இல்லை என்றால் கண்டிப்பாக கிடைக்காது.

பலர் ஆன்மீகம் என்று சொல்லிக்கொண்டு அதற்கு ஒப்பாத ஒரு நிலையில் இருக்கின்றனர். இதனை நீங்கள் எடுத்துவிட்டால் உங்களிடம் ஒரு நல்ல சக்தி குடிக்கொள்ளும். உங்களை நோக்கி அனைத்தும் ஈர்க்கப்பட்டு வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: