Followers

Sunday, September 22, 2019

இரண்டு பேரில் நீங்கள் ஒருவர்


வணக்கம்!
          கடந்த காலத்தில் ஒரு ஊரில் நூறு பேர் வசித்து வந்தால் அதில் ஒன்று அல்லது இரண்டு நபர் மட்டும் நல்ல விபரமாக இருந்து அந்த ஊரில் பெரிய செல்வந்தராக இருப்பார்கள் மற்றவர்கள் அனைவரும் ஏதோ வாழ்கிறோம் என்றபடி வாழ்ந்து இருப்பார்கள்.

இன்றைய காலத்தில் அனைவரும் விபரமாக இருந்து ஒரளவு நன்றாக இருக்கின்றனர் அதே நேரத்தில் இதிலும் இரண்டு பேர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்கள். உலகத்தில் உள்ள விதிப்படியே இரண்டு பேருக்கு மற்றவர்கள் அனைவரும் உழைக்கவேண்டும் என்பது போலவே இருக்கும்.

பெரும்பாலும் நமது நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்வது அனைத்திலும் ஈடுபாட்டோடு செய்யுங்கள். அதே நேரத்தில் அடுத்த விசயம் என்று ஒதுங்காமல் முயற்சி செய்து அனைத்திலும் பங்குக்கொள்ளுங்கள் என்று சொல்லுவேன்.

இங்கு உள்ள பலருக்கு என்ன என்றால் நம்முடைய வேலை உண்டு நாம் உண்டு என்று இருப்பார்கள். ஏன் தேவையில்லாத வேலை என்று இருந்துவிடுவார்கள். அடுத்த விசயம் தேவையில்லை என்றாலும் மிகப்பெரிய இடத்தில் சாதிக்கும் நபர்கள் அனைவரும் அனைத்திலும் பங்குக்கொண்ட காரணத்தால் மட்டுமே வெற்றி பெற்று இருக்கின்றார்கள்.

உங்களிடம் நிறைய சக்தி இருக்கின்றது. அதனை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்த்து பயன்படுத்தினால் கண்டிப்பாக நீங்கள் இருக்கும் ஊரில் அந்த இரண்டு பேரில் நீங்கள் ஒருவராக இருக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: