Followers

Thursday, September 5, 2019

ஆண் பாவம்


வணக்கம்!
          ஆண்களுக்கு பாவம் இல்லை என்பது அனுபவ கருத்தாக நான் உங்களிடம் சொல்லுகிறேன். ஒரு ஆண் தன்னுடைய தேவைக்காக இயங்குகிறான் என்பது மிக மிக குறைவாகவே இருக்கும். தன் குடும்பத்தின் தேவைக்காகவே உழைக்கிறான் அவனின் தேவை இங்கு இல்லை அல்லது குறைவு என்று சொல்லலாம்.

ஆணை இயக்கும் சக்தியாகிய பெண்களுக்கு பாவம் போய்சேரும் என்பதை சொல்லலாம். பெண்கள் தான் தூண்டும் சக்தியாக இருக்கின்றார்கள். பெண்களுக்காகவே உழைக்கும் ஆணாகவே இருக்கின்றார்கள்.

உலகில் முதன் முதலில் தோன்றியது பெண் இனம். பெண் இனத்திற்க்கு பாதுகாப்பு என்பதற்க்காக ஆண் இனத்தை படைத்தான் என்று படித்து இருக்கிறோம். ஆணிற்க்கு உள்ள தோஷம் மற்றும் பாவம் எல்லாம் குறைவாகவே இருக்கும்.

ஜாதகத்தை வைத்து நான் சொல்லவில்லை ஒரு அனுமானத்தில் இதனை சொல்லுகிறேன். தன்னை ஒரு அர்பணிப்பு வாழ்க்கையாகவே செயல்படுவதால் அர்பணிப்பில் ஏது பாவம் வந்து சேர போகின்றது. அவர்களுக்கு இருக்கும் தோஷமும் பெரியதாக வேலை செய்வதில்லை.

இதனை படித்துவிட்டு நாம் இனி மேல் பாவம் செய்யலாம் என்று இறங்கவேண்டாம். ஏதோ உங்களிடம் இதனை சொல்ல தோன்றியது அதனால் சொல்லுகிறேன். ஆண்களுக்கு பெரிய பரிகாரம் தேவைப்படாது பெண்களாக இருந்தால் அது கண்டிப்பாக தேவைப்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: