Followers

Friday, September 6, 2019

செவ்வாய் நீசம்


வணக்கம்!
          செவ்வாய்கிரகம் நீசம் அடைந்தால் அந்த ஜாதகர் நிறைய போராட்டங்களை சந்திக்கவேண்டியிருக்கும். ஒரு வேலை கூட அவர்க்கு எளிதில் அமைந்துவிடுவதில்லை. நிறைய கஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்தாலும் அதிலும் பெரியதாக ஒன்றும் கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள்.

செவ்வாய் நீசத்தைப்பற்றி ஏற்கனவே நாம் சொல்லிருந்தாலும் பலர் இதனால் கஷ்டப்படுவதால் மறுபடியும் எழுதுகிறேன். கையில் பணம் வந்தாலும் அந்த பணம் அவரிடம் தங்காது. நாம் வேறு ஏதோ கிரகத்தால் இப்படி நடக்கின்றதோ என்று நினைத்துக்கொண்டு இருப்போம் ஆனால் செவ்வாய் கிரகத்தால் தான் இது நடக்கின்றது என்பதை போக போக உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும்.

செவ்வாய்கிரகம் நீசம் அடையும்பொழுது அந்த நபர்க்கு வருகின்ற பணம் எல்லாம் வேறு ஏதோ ஒரு தேவைக்காக செலவு செய்ய நேரிடும். கையில் பணம் வந்தவுடன் அது வேறு தேவைக்கு என்று செல்லும். காலம் முழுவதும் உழைத்துக்கொண்டே இருக்க வைக்கும்.

ஒரு சிலருக்கு கடன் பிரச்சினை என்று சொல்லுவார்கள் அவர்களுக்கு கூட செவ்வாய் கிரகம் தான் இந்த கடன் பிரச்சினையை ஏற்படுத்திக்கொடுத்துவிடுகின்றது. செவ்வாய் நீசமாக இருக்கும் நபர்களுக்கு கடன்பிரச்சினை வருகின்றது.

செவ்வாய் நீசமாக இருப்பவர்கள் என்ன செய்யலாம் என்று கேட்கலாம். முருகவழிபாட்டை மேற்க்கொள்ளுங்கள். பழனி முருகன் கோவிலுக்கு அடிக்கடி சென்று வாருங்கள். உங்களுக்கு அருகில் இருக்கும் பிரசித்திபெற்ற முருகன் கோவிலுக்கும் சென்று வரலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: