Followers

Friday, April 12, 2013

குழந்தை பாக்கியம் பகுதி 3



வணக்கம் நண்பர்களே !
                    குழந்தை பாக்கியம் பகுதியில் ஒரு பெண்ணின் ஜாதகத்தை பார்க்கலாம. இந்த பெண்ணிற்க்கும் குழந்தை கிடையாது அது எதனால் என்று பார்க்கலாம்.

தனுசு லக்கினம் துலாம் ராசி லக்கினாதிபதி மூன்றாவது வீட்டில் போய் அமர்ந்துவிட்டார். ஐந்தாவது வீட்டு அதிபதி பனிரெண்டாம் வீட்டில் அமர்ந்து விட்டார். அவர் பனிரெண்டாம் வீட்டில் அமர்ந்தாலும் சொந்த வீட்டில் தான் அமர்ந்திருக்கிறார். ராகுவோடு சேர்ந்து அமர்ந்துவிட்டார். 

இந்த பெண்ணிற்க்கு திருமணம் முடிந்து 7 மாதத்தில் குழந்தை உருவானது. உருவான குழந்தை மூன்று மாதத்தில் கலைந்துபோய்விட்டது. இப்படியே நான்கு முறை நடந்தது. அதன் பிறகு குழந்தை உருவாகவில்லை. 

குருவின் நிலை மூன்றாவது வீட்டில் அமர்ந்துவிட்டார். மூன்றாவது வீட்டில் அமர்ந்தாலும் அவரின் சொந்த நட்சத்திரமான பூரட்டாதியில் தான் சென்றுக்கொண்டுருக்கிறார். அதனால் குழந்தை பாக்கியம் உருவாகியது என்று கூட வைத்துக்கொள்ளலாம். ஐந்தாவது வீட்டு அதிபதியான செவ்வாய் சொந்த வீட்டில் அமர்ந்தாலும் அது ராகுவோடு அமர்ந்திருக்கிறார். செவ்வாய் சென்றுக்கொண்டிருக்கும் நட்சத்திரம் கேட்டை. புதனின் நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டிருக்கிறார். 

நாம் கவனிக்கவேண்டியது ராகுவின் நிலையை தான். ராகு அனுஷம் நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டிருக்கிறது. அனுஷம் சனியின் நட்சத்திரம். சனியின் தன்மையை அப்படியே பிரதிபலிக்கிறது. செவ்வாயும் சனியும் இணைந்தது போல் ஆயிற்று. அது தான் குழந்தை கலைந்ததின் காரணம். 

நாம் அடுத்து கவனிக்கவேண்டியது சுகஸ்தானம். ஒருவருக்கு சுகஸ்தானம் என்னும் நான்காம் வீடும் நன்றாக அமைய வேண்டும் அப்பொழுது மட்டும் அனைத்து சுகத்தையும் அனுபவிக்கமுடியும். இவருக்கு நான்காம் வீட்டு அதிபதி குரு அந்த வீட்டிற்க்கு பனிரெண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். சுகத்தை அனுபவிக்க முடியாமல் போகிறது. குழந்தை இல்லை என்றால் சமுதாயத்தில் வெளியில் தலையை காட்டமுடியாதே. கிடைக்கவேண்டிய அனைத்து சுகமும் வீணாகபோனது. 

சனிக்கிரகம் ஏழாவது வீட்டில் அமர்ந்திருக்கிறது. ஏழாவது வீட்டில் இருந்து லக்கினத்தை பார்க்கிறது. லக்கினத்தில் சூரியன். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். இவர் வெளியில் தலைக்கூட காட்டமுடியாத நிலையை செய்துவிட்டது. சனிக்கிரகம் அவமானத்தை அதிகமாக தருவதில் வல்லவர். வெளியில் சென்றால் உனக்கு குழந்தை இல்லையா என்று மக்கள் கேட்டே இவரை கொன்றுவிடுவார்கள். அதனாலேயே வெளியில் செல்வதில்லை.

பரிகாரம் 

மக்களிடம் ஒரு நல்ல பழக்கவழக்கம் இருக்கிறது. அனைத்தும் முடிந்த பிறகு சோதிடரை அணுகி ஆலோசனை கேட்பது. படம் முடிந்துவிட்டது. ஆரம்பத்தில் இருந்து படத்தை திருப்பி போடு என்றால் எப்படியப்பா படத்தை போடமுடியும். சினிமா படமாக இருந்தால் ரீவைண்டு செய்து ஒட்டலாம். வாழ்க்கை படத்தை எப்படி ரீவைண்டு செய்து ஓட்டமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: