Followers

Sunday, April 28, 2013

ஆன்மீக அனுபவங்கள் 86



வணக்கம் நண்பர்களே!
                    நீண்ட இடைவெளிக்கு பின்பு குருவை சந்தித்ததால் உங்களை சந்திக்கமுடியவில்லை. குருவுடன் இருந்ததால் பதிவு எழுதும் எண்ணம் ஏற்படவில்லை. இருந்தாலும் நேற்று ஒரு பதிவை தந்தேன். தொடர்ந்து பார்க்கலாம்.

நான் காயத்ரி மந்திரத்தை எடுத்துக்கொண்டு செய்து வாருங்கள் என்று சொன்னேன். ஒரு சில நண்பர்கள் மட்டும் செய்துக்கொண்டு வருகிறார்கள். பல நண்பர்கள் செய்கிறேன் என்று சொன்னார்கள் ஆனால் செய்யவில்லை. நல்லவற்றை அதிக நாட்களுக்கு நிறுத்தி வைப்பவர்கள் வாழ்க்கையில் எதையும் அடைய முடியாது. 

எந்த விஷயமும் நலலது என்று தோன்றியவுடனேயே துவங்கி விடுவது நல்லது. நாளை செய்யலாம் என்ற எண்ணம் மட்டும் இருக்ககூடாது. நாளை செய்கிறேன் என்று சொல்லுபவர்கள் செய்யவதற்க்கு விருப்பம் இல்லை என்று தான் கொள்ளவேண்டும். நாளை செய்கிறேன் என்று சொல்லுவது ஒத்தி போடுவதற்க்கு ஒரு வழி இன்றி வேறு ஒன்றும் இல்லை. 

நாளைக்கு என்று தள்ளி வைப்பது ஆபத்தானது. நாளைக்கு தள்ளிப் போடுபவர்கள் எப்பொழுதுமே தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒரு காலும் செய்யபோவதில்லை. வாழ்நாளில் எந்த ஒரு விஷயமும் சரியானதாகத் தோன்றினால் அந்த நிமிடமே அதை துவங்கிவிடவேண்டும். நல்லவற்றை உடனேயே செய்ய வேண்டும். தீயவற்றை தள்ளிப்போடவேண்டும். நீங்கள் செய்கின்ற இந்த செயல் உங்களை வாழ்க்கையில் உயர்த்திக்கொண்டு போய்விடும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

நீங்கள் செய்கின்ற காயத்ரி மந்திரம் உயிரோட்டம் உள்ள ஒரு செயல். அக்னியை போன்றது அந்த செயல். அதனை நீங்கள் தூண்டிவிட்டால் நீங்கள் புதிய பிறவியாகிட்டது போல் தோன்றும். நீங்கள் இருக்கும் பிறவியிலேயே அடுத்த பிறவி எடுத்ததை போன்ற உணர்வு ஏற்படும். உங்களின் சக்தியை அனைத்தையும் திரட்டி இந்த செயலில் ஈடுபடுங்கள்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: