Followers

Monday, April 1, 2013

கும்பம்: ஐந்தில் செவ்வாய்+சனி



வணக்கம் நண்பர்களே!
                     கும்ப ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஐந்தில் செவ்வாய் சனி சேர்ந்து நின்றால் முன் ஜென்மத்தில் எப்படிபட்ட பாவத்தை செய்திருப்பார்கள் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

கும்ப ராசிக்கு ஐந்தாவது ராசியாக வருவது மிதுனம் அதன் அதிபதி புதன்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

சகோதரர்,மாமன் மற்றும் கோவிலில் வேலை செய்பவர்கள்.

அடையாளம்?

மிதுன ராசி மிருகசிரிஷம் 3, 4 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். தெலுங்கு மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தெற்க்கு பக்கமாக இருந்திருக்கும்.

மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருந்திருப்பார்.அந்நிய மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருந்திருக்கும்.

மிதுன ராசி புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் பொன்நிறம்போல் தோற்றம் அளிக்கும். மலையாள மொழி தெரிந்திருக்கும். இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருந்திருக்கும்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

வேறு என்ன சூழ்ச்சி தான் முதல் ஆயுதம் அதன் மூலம் பாதிப்பை ஏற்படுத்திருப்பீர்கள்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

மிதுன ராசி மிருகசிரிஷம் 3, 4 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

கை மற்றும் தோல் பகுதியில் தாக்கி இறந்திருக்கலாம்.

மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

கால்கள் மற்றும் பாதங்களில் தாக்கி உயிர்போயிருக்ககூடும்.

மிதுன ராசி புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இதயத்தில் தாக்கி கொன்றுருக்ககூடும். 

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

மிதுன ராசி மிருகசிரிஷம் 3, 4 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தெற்கு திசையில் இருக்கும். 

மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருக்கும். 

மிதுன ராசி புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருக்கும். 

மேலும் விளக்கம்

சனி கிரகம் செவ்வாய் கிரகமும் ஒரு ஜாதகத்தில் இணையும்போதோ அல்லது ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்ளும்போது அதிக பிரச்சினையை அந்த ஜாதகருக்கு கொடுக்கும். சனி பஞ்சபூதத்தில் காற்று கிரகம் செவ்வாய் நெருப்பு கிரகம் இரண்டும் பூர்வ புண்ணியத்தில் இணையும்போது அதிகமான சிக்கலை ஏற்படுத்தும்.

புதனின் வீட்டில் அமரும்போது இரு கிரகமும் அதிகமான கெடுதலை தான் தரும். இந்த ஜென்மத்தில் நல்லது செய்யவும்.

பரிகாரம்

புதன்கிழமை தோறும் நவகிரங்களை வணங்கி வாருங்கள் நீங்கள் தேடும் நபர் உங்களை தேடிவருவார்.
நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: