Followers

Monday, April 29, 2013

வியாபார ஆலோசனை :விளக்கம்



வணக்கம் நண்பர்களே!
                     நேற்று வெளியிட்ட தொழில் செய்யும் நண்பர்களுக்கு என்ற பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசிவருகிறார்கள். பல நண்பர்கள் ஒரு சில கருத்துக்களை கேட்டார்கள் அவர்கள் வழியாக புதிய நண்பர்களுக்கும் எளிதில் விளக்கம் தருவதற்க்காக இந்த பதிவு.

நீங்கள் கூட்டுத்தொழில் புரிபவர்களாக இருந்தால் தொடர்புக்கொள்ள வேண்டாம். கூட்டுத்தொழில் செய்பவர்கள் உங்களின் பங்குதாரர்கள் அனைவரும் சேர்ந்து வந்து என்னை நேரில் சந்தித்து பேசினால் உங்களுக்கு உதவமுடியும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் ஒரு நபர் மட்டும் வந்து பேசினால் உங்களுக்கு என்னால் உதவிச்செய்ய முடியாது. பல கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கும் நான் உதவி செய்துக்கொண்டு வருகிறேன். அவர்கள் அனைவரும் சேர்ந்து என்னை வந்து சந்தித்து பேசினதால் அவர்களுக்கு உதவ முடிகிறது. 

பங்குவர்த்தகத்தில் உள்ள நபர்கள் பல பேர் தொடர்புக்கொண்டு பேசினார்கள். உங்களுக்கு என்னால் உதவ முடியாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். பங்குவர்த்தகம் பல சிக்கல்களை கொண்டது. அதில் வென்று வருவது என்றால் வணிகம் நடைபெறும் இடத்தில் நான் இருந்ததால் தான் முடியும். என்னால் உறுதி தரமுடியாத சூழ்நிலை இதில் இருப்பதால் நான் ஈடுபடுவதில்லை. 

என்னால் 100 சதவீதம் வெற்றியை தரமுடியும் என்ற நம்பிக்கை இருக்கும் வணிகத்தில் மட்டும் இறங்குகிறேன். பங்குவர்த்தகத்தில் நம்பிக்கை வைக்கமுடியாத சூழ்நிலை இருக்கிறது. அதனால் இதில் ஒற்றுக்கொள்வதில்லை. 

வராத பணவரவுகளை திருப்பிவருவதற்க்கு ஏற்பாடு செய்து தாருங்கள் என்று பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசினார்கள். இந்த வேலையில் கண்டிப்பாக இறங்ககூடாது என்று எனது குரு கட்டளை போட்டு இருக்கிறார். அவர் என்னிடம் சொல்லும்போது இவன் பணம் கொடுத்திருப்பான் பணத்தை வாங்கியவன் உண்மையில் கஷ்டத்தில் இருக்கலாம் அவனை ஏன் தொந்தரவு செய்யவேண்டும். இதனை நீ செய்யகூடாது என்று சொல்லியுள்ளார். அதனால் இந்த வேலையை நான் செய்யமாட்டேன்.

நண்பர்களே என்ன இவர் வியாபாரத்தில் இறங்கிவிட்டார் என்று நினைக்கலாம். நான் சந்நியாசி தீட்சை பெறவில்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன். நான் சோதிடன் தான் உங்களை போல் அனைத்து பழக்கவழக்கம் என்னிடம் இருக்கிறது. எனக்கு பணம் தேவை அதற்கு என்னுடைய சக்தியை பயன்படுத்துகிறேன். ஆரம்பத்தில் இருந்து உங்களிடம் சொல்லி வரும் விஷயம் பணத்தேவைக்கு ஆன்மீகத்தை பயன்படுத்துங்கள். தவறு ஒன்றும் இல்லை.

குரு கொடுத்த சக்தியை தற்பொழுது 1 சதவீதம் பயன்படுத்தியுள்ளேன். முழுவதும் பயன்படுத்தினால் உலகத்தில் நம்பர் 1 பணக்காரன் நானாக தான் இருப்பேன். பெருமையாக சொல்லவில்லை நான் சக்தியின் வீரியத்தை  நம்புகிறேன். அம்மனின் அருளை முழுமையாக பயன்படுத்தும் பொழுது உங்களுக்கு தெரியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: