Followers

Monday, April 15, 2013

சிவமே: பகுதி 6



வணக்கம் நண்பர்களே !
                     கடந்த சிவமே பதிவில் தாந்திரீக முறையைப் பற்றி சொன்னேன். அதனைப்பற்றி பல நண்பர்கள் போனில் தொடர்புக்கொண்டு கேட்டார்கள். கொஞ்சம் விளக்கமாக பதிவு தாருங்கள் என்று கேட்டார்கள் அவர்களுக்காக இந்த பதிவு

தந்தரா யோகா என்று இதனை அழைப்பார்கள். ஒரு மனிதன் கடவுளை அடைய இருவழிகளை  வைத்திருக்கிறார்கள். ஒன்று பிரம்மசாரியாக இருந்து கடவுளை அடைவது மற்றோன்று இல்லறவாழ்க்கையை நடத்தி கடவுளை அடைவது. பிரம்மசாரியாக இருந்தால் அவர்களுக்கென்று ஒரு வழியை வைத்திருக்கிறார்கள். இல்லறவாசி இல்லறத்தில் ஈடுபடுபவன். அவனும் இறைவனை அடையவேண்டும் என்று கண்டுபிடித்தது தான் தந்திரா யோகா. இது உங்களுக்கு தெரிந்தது தான். காமசூத்ராவைப் பற்றி படித்து இருப்பீர்கள். காமசூத்ராவும் தந்திரா யோகாவில் ஒரு அங்கம் தான்.

பிரம்மசரியாக இருப்பவர்கள் தங்களின் ஆண்மைசக்தியை உச்சம் தலையில் ஏற்றி அதன் மூலம் அவர்கள் கடவுளை அடைவார்கள். இல்லறவாழ்க்கையில் இருப்பவர்கள் எப்படி இறைவனை அடைவது என்பதைப்பற்றி வழிமுறைகளை சொல்லுவது தான் தந்திரயோகா. அதனை தான் நான் தாந்தீரமுறை என்று சொல்லிருந்தேன். 

தந்திராமுறை இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது ஆனால் இந்தியாவில் உள்ளவர்கள் இதனை கடைபிடிப்பது அரிது என்று நினைக்கிறேன். இல்லறவாழ்க்கையில் இருப்பவர்கள் காமத்தில் ஈடுபடும்போது எப்படி ஈடுபடவேண்டும். தொடர்ந்து காமத்தில் இன்பத்தோடு இருப்பதைப்பற்றி பல பயிற்சிகளை கொண்டது. ஒரு தம்பதிகள் ஒரு நாளில் காமத்தில் அதிகபட்சம் ஈடுபடுவது இரண்டு அல்லது மூன்று தடவை இருக்கலாம். இவர்கள் உச்சநிலையில் இருப்பது ஒரு சில மணித்துளிகள் தான் இருக்கும். 

அதிகமணித்துளிகள் இருப்பது எப்படி என்பதை எல்லாம் அதில் பயிற்சியாக சொல்லிருப்பார்கள். தாந்தீரீக முறையை கடைப்பிடிப்பவர்கள் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு பத்து தடவை கூட காமத்தில் ஈடுபடமுடியும் என்று சொல்லியுள்ளார்கள். எந்தளவுக்கு அந்த இன்பத்தை அனுபவிக்கிறீர்களே அந்தளவு கடவுள் தன்மையில் இருக்கலாம் என்று சொல்லியுள்ளார்கள்.

அதற்கான வழிகளையும் சொல்லியுள்ளார்கள். இதில் மூச்சுபயிற்சியும் உண்டு. காமத்தில் ஈடுபடும்போது இருவரின் மனநிலை மற்றும் உடல்நிலை நன்றாக இருக்கவேண்டும் என்று அதற்காக பயிற்சியும் முறைப்படி இதில் உள்ளது. இருவரின் உடல்நிலை சாப்பிடும் சாப்பாட்டில் மட்டும் இல்லை. முறைப்படி பயிற்சி செய்யும்போது அவர்கள் பிரபஞ்சசக்தியும் அவர்களுக்கு சக்திகொடுக்கும். இந்த தந்திரயோகா மூலம் தான் இரு ஆத்மாவும் ஒரே ஆத்மாவாக மாற்றமுடியும் அதற்கான பயிற்சியும் அதில் சொல்லியுள்ளார்கள். 

காமம் என்பது இருவருக்கும் புத்துணர்ச்சி கொடுக்கவேண்டும். புத்துணர்ச்சி கொடுக்கிறதா என்றால் நூற்றில் பத்து பேர்க்கு புத்துணர்ச்சி தரலாம். இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவும் விஷத்தன்மையில் இருக்கிறது. அதிகபட்சமாக உணவு இவர்களுக்கு புத்துணர்ச்சி கொடுப்பதற்க்கு பதில் இவர்களுக்கு சோம்பேறி தனத்தை தருகிறது. இவர்களை சுற்றியும் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது அப்படி இருக்கும் போது இவர்கள் காமத்தில் எப்படி இறைவனை அடையமுடியும். 

இல்லறத்தில் இருப்பவர்கள் தான அதிகமாக கோவிலுக்கு செல்வார்கள். அந்த கோவிலிலும் அதற்க்கான வழியை தரவேண்டும் என்பதற்க்காக தான் நமது முன்னோர்கள் கோவிலில் சிற்பங்களை தந்திரமுறையில் உருவாக்கி வைத்தார்கள். இந்து மதத்தில் உள்ளவை அனைத்தும் பிராடிக்கலாக இருக்கும். கொள்கை ரீதியாக இருக்காது அனைத்தையும் நீ அனுபவிப்பது மூலமாக தான் கடவுளை அடையமுடியும். 

ரமணரிடம் ஒரு வெளிநாட்டு நபர் வந்து கேட்டார் நான் இல்லறத்தில் இருப்பது மற்றும் உலகவிசயங்களை எல்லாம் படித்து இருக்கிறேன். இங்கு நான் வந்து கற்பதற்க்கு என்ன இருக்கிறது என்ற கேட்டார். அதற்க்கு ரமணர் நீ கற்றதை எல்லாம் மறக்கவேண்டும் அதனை கற்கதான் இங்கு வ்ந்திருக்கிறாய் என்றார். நீங்கள் அனைத்தையும் புத்தகத்தில் படிக்கலாம். இந்து மதத்தில் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. அனைத்தும் செயல்முறை மட்டுமே. 

நீங்கள் இல்லறவாழ்க்கையில் ஈடுபட்டால் தந்திரயோகத்தை கணவன் மனைவி இருவரும் கற்று ஈடுபடும்போது மட்டுமே இறைவனை அடையமுடியும். இன்றைக்கு இருக்கும் யோகா தியான நிலையங்கள் இதனை கற்றுக்கொடுக்கிறார்களாக என்பது எனக்கு தெரியவில்லை. அப்படி கற்றுக்கொடுத்தால் தாராளமாக நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.

ஏன் மனிதன் காமத்திற்க்கு அலைகிறான். அந்த உச்சநிலையில் எல்லையற்ற வெட்டவெளியான சிவத்தில் ஐக்கியமாகிறான். ஐக்கியமானவுடன் சிறிய நொடிப்பொழுதில் திரும்பிவிடுகிறான். அதனால் பலமுறை அவன் உறவுக்கொள்ள நினைக்கிறான் ஆனால் அவனின் மனமும் உடலும் மற்றும் எதிர்பால் உள்ள மனமும் உடலும் ஏற்றுக்கொள்வதில்லை. இருவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்க்கான அதே நேரத்தில் உச்சநிலையில் அதிகநேரம் நீடிக்கவேண்டும்.தொடக்க நிலையில் இருந்தே உச்சநிலையில் போல் இருக்கவேண்டும் என்பதற்க்காக பல பயிற்சியை தருவது தான் தந்திராயோகா. 

பழைய காலத்தில் வானில் சுக்கிரனை பார்த்து அது நடுவானுக்கு வரும்போது காமத்தில் ஈடுபட்டால் அதிக நேரம் ஈடுபடலாம் என்பதை எல்லாம் பார்த்து இதில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் யாரும் வானத்தை பார்ப்பது கூட கிடையாது. வானத்தை பார்த்தால் அது அவர்கள் மேல் விழுந்துவிடும் என்று அவர்களுக்கு பயம் என்று நினைக்கிறேன்.

மந்திர வழியில் ஒரு மந்திரம் இருக்கிறது அந்த மந்திரத்தை 108 முறை சொல்லிவிட்டு நீங்கள் உடலறவுக்கொண்டால் உங்களால் உச்சநிலைக்கு செல்லவே முடியாது. பல மணிநேரம் கூட உடலறவுக்கொள்ளமுடியும். இதனை எல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் நமது மதத்தில் உள்ளவை அனைத்தும் நமது வாழ்க்கைககு பயன்படுபவை மட்டுமே வைத்திருக்கிறார்கள்.

இல்லறத்தில் இருப்பவன் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டியது தந்திரா யோகா மட்டுமே. கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து கடவுளை அடைகிறேன் என்று சொல்லிக்கொண்டு வெளியில் வேண்டுமானால் நான் பக்திபழம் என்று காட்டிக்கொள்ளலாம். உண்மையான பக்தி எல்லாம் அது கிடையாது. உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். இல்லறவாழ்க்கை எனக்கு வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் தாந்திரயோகாவை கற்றுக்கொண்டு இல்லறத்தில் ஈடுபடு்ங்கள். பிரம்மசரியத்திற்க்கு தனி வழி உண்டு.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

1 comment:

Vijithan said...

என்ன மந்திரம் என்று தெரியப் படுத்தவும்.