Followers

Monday, April 1, 2013

மகரம்: ஐந்தில் செவ்வாய்+சனி



வணக்கம் நண்பர்களே!
                     மகர ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஐந்தில் செவ்வாய் சனி சேர்ந்து நின்றால் முன் ஜென்மத்தில் எப்படிபட்ட பாவத்தை செய்திருப்பார்கள் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

மகர ராசிக்கு ஐந்தாவது ராசியாக வருவது ரிஷபம் அதன் அதிபதி சுக்கிரன்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

சகோதரிகளுக்கு மற்றம் வேலையாட்களுக்கு பாதிப்பை கொடுத்திருப்பார்.

ரிஷப ராசியில் கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். சமஸ்கிரத மொழி பேசியிருப்பார். இவரின் வீடு கிழக்கு பக்கமாக இருந்திருக்கும்.

ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் வெள்ளை கலரில் இருந்திருக்கலாம். தாய்மொழி பேசியிருப்பார். இவரின் வீடு வடமேற்கு திசையில் இருந்திருக்கும்.

ரிஷப ராசியில் மிருகசீர்ஷம் 1, 2 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். தெலுங்கு மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தெற்கு திசையில் இருந்திருக்கும்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

அவரை இழிவாக பேசி அவருக்கு மனது ரீதியாக பிரச்சினை கொடுத்திருப்பீர்கள்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

ரிஷப ராசியில் கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

தலையில் தாக்கி கொல்லபட்டுருப்பார். கை கால்கள் கூட வெட்டபட்டுருக்கலாம்.

ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

முகத்தில் அல்லது வயிற்றில் தாக்கி அதன் மூலம் நோய் ஏற்பட்டு இறந்திருப்பார்.

ரிஷப ராசியில் மிருகசீர்ஷம் 1, 2 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

கை மற்றும் தோல் பகுதியில் தாக்கி இறந்திருக்கலாம்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

ரிஷப ராசியில் கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும்.

ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடமேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும்.

ரிஷப ராசியில் மிருகசீர்ஷம் 1, 2 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தெற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும்.

மேலும் விளக்கம்

சனி கிரகம் செவ்வாய் கிரகமும் ஒரு ஜாதகத்தில் இணையும்போதோ அல்லது ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்ளும்போது அதிக பிரச்சினையை அந்த ஜாதகருக்கு கொடுக்கும். சனி பஞ்சபூதத்தில் காற்று கிரகம் செவ்வாய் நெருப்பு கிரகம் இரண்டும் பூர்வ புண்ணியத்தில் இணையும்போது அதிகமான சிக்கலை ஏற்படுத்தும்.

சுக்கிரனின் வீட்டில் அமர்வதால் தீயவழியில் திட்டம் தீட்டி அவரை பாதிக்கச் செய்திருப்பீர்கள். இந்த ஜென்மத்திலாவது நல்ல வழியில் நடந்து முன்ஜென்மத்தின் கர்மாவை குறைத்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம்

செவ்வாய் சனி மற்றும் வெள்ளி நாட்களில் தீபம் ஏற்றி வாருங்கள். சம்பந்தப்பட்ட நபர் உங்களின் முன் வருவார்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: